தேர்தல் வரும் பின்னே
வாக்குறுதிகள் வரும் முன்னே
தேர்தலில் வென்ற பின்னே
வாக்குறுதிகள் காற்றில் பறக்குமடி கண்ணே
நாம் கற்றுக் கொள்ளாத பாடமிதுவா?
வடமாகாண சபைத் தேர்தலால்
வரும் மாறுதல்கள் என்ன என்ன
கிழக்கிலே வந்த மாறுதல்கள் என்ன என்ன
அங்கு தந்த ஆறுதல்கள் என்ன என்ன
கொள்கை விளக்கம் கொடுக்க
தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து
அக்கொள்கைகளுக்கு ஏற்ப
வேட்பாளர் தேர்ந்தெத்து
மக்கள் மத்தியில் பெரும் பரப்புரையால்
விளக்க உரைகள் வழங்கி
வாக்குக் கேட்பதே தேர்தல்
என நாமறிவோம்
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்னே
வேட்பாளர் பட்டியல் கொடுத்து
ஏன் என நாம் அறியோம்
நோர்வேயையும் நம்பி
அன்று ஏமாந்தோம் -இன்று
மீண்டும் புதுடில்லியின் வலையில்
நாம் விழுகின்றோம்
புது டில்லி பின்னால் நின்று இயக்க
சம்பந்தனாரின் முதல் நகர்வு
சுமந்திரனின் அரங்கேற்றம்
அவர் புலம் பெயர்ந்தோரை
ஒதுங்குங்கள் என்றார்
இந்தியாவைத் சொற்படி
சம்பந்தனாரின் இரண்டாம் நகர்வு
விக்கினேஸ்வரன் ஐயா
அவர் ஒரு படி மேலே போய்
புலம்பெயர் தமிழர்களோடு
தமிழ் நாட்டுத் தமிழர்களையும்
ஒதுங்குங்கள் என்கின்றார்
அடுத்து சம்பந்தன் ஐயா
இலங்கை வாழ் தமிழர்களையும்
ஒதுங்கி இருங்கள் எனச் சொல்ல
யாரைக் கொண்டு வருவார்.
முதலிரு கட்டப்போரிலும்
ஆட்சியாளர் காலைத்
தழுவிச் சுகம் கண்ட
சங்கரியும் சித்தார்தனும்
மூன்றாம் கட்டப்போரில்
போராளிகளாய் நிற்க
ஆறுதல் கிடைக்குமா

No comments:
Post a Comment