Thursday, 13 June 2013
விஞ்ஞானி: ஓம் என்று சொல்லி தியானம் செய்தால் தேர்வில் சித்தியடையலாம்.
ஓம் என்று சொல்லி தியானம் செய்தால் மாணவர்களின் மூளையில் ஏற்படும் விளைவுகள் பற்றி University of Connecticut இன் அமெரிக்கப் பேரசிரியர் ரொபேர்ட் கொல்பேர்ட் 235 மாணவர்களை வைத்து ஆய்வு செய்துள்ளார்.
பேரசிரியர் ரொபேர்ட் கொல்பேர்ட் செய்த ஆய்வின் படி ஒரு நாளைக்கு இருதடவை இருபது நிமிடங்கள் ஆழ் நிலைத் தியானம் செய்த மாணவர்கள் தியானம் செய்யாத மாணவர்களிலும் பார்க்க 25 விழுக்காடு அதிக திறமையாக தேர்வுகளில் சித்தியடைந்துள்ளனர். கண்களை மூடிக் கொண்டு குறித்த ஒரு ஒலியை உச்சரித்துக் கொண்டு ஆழ்நிலைத் தியானம் செய்த மாணவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்.
இந்த ஆழ்நிலைத் தியானம் மாரடைப்பை தவிர்க்கும், குருதி மூளைக்கு செல்வது தடைப்படும் போது ஏற்படும் strokeஐத் தவிர்க்கும், மன அழுத்தத்தை தவிர்க்கும் என்றும் ஆய்வின் போது கண்டறியப் பட்டுள்ளது.
தமிழர்கள் தியானத்தின் சிறப்பு பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து கொண்டனர். பீட்டில்ஸ் இசைக்குழுவினர் முதல் முதலாக தியானத்தின் சிறப்பை உலகறியச் செய்தனர். பனிப்புலம் என்னும் இணையத்தளம் தியானத்தின் நன்மைகளை இப்படிப் பட்டியலிட்டுள்ளது:
உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.
உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.
அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.
சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.
மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.
உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.
குறைவான பிராண வாயுவே செலவாகிறது.
உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.
குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.
இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.
மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.
தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.
ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.
மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.
அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.
சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.
நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.
மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.
இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment