Sunday 24 February 2013

ஈரான் மீண்டும் ஒரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றினோம் என்கிறது

தமது வான் பரப்புக்குள் புகுந்த ஒரு வேவு பார்க்கும்ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் Great Prophet-8 என்னும் குறியீட்டுப் பெயருடன் தன்னை உளவு பார்க்கும் வேவு விமானங்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஈரானிய ஜெனரல் ஹமிட் சர்கெய்லி தமது இலத்திரனியல் போராளிக் குழுக்கள் ஈரானில் வான்பரப்புக்குள் வேவுபார்க்க வந்த ஆளில்லா விமானத்தைப் பொறுப்பேற்றுத் தரை இறக்கியதாகச் சொல்கிறார்.இது ஈரானிய நகரான சர்ஜனில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று இதுவரை அறியப்படவில்லை.



ஈரான் அணுவலு உற்பத்திக்காக யூரேனியம் பதப்படுத்தி வருகிறது. ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்யப் போவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதுகின்றன. ஈரான் நிலத்தின் கீழ் மிகவும் ஆழமான இடங்களில் தனது யூரேனியப் பதப்படுத்தலைச் செய்து வருகிறது. இதை எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பலவிதங்களில் சேதப்படுத்தி வருகிறது. அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல், இணைய ஊடுருவிகள் மூலம் யூரேனியம் பதப்படுத்தும் பொறிகளைச் சேதப்படுத்துதல் பலதடவை நடந்துள்ளன.

அண்மையில் ஈரான் உயர்ந்த ரக மையச் சுழற்ச்சிப் பொறிகளையும் வலுமிக்க காந்தங்களையும் கொள்வனவு செய்ததாக செய்திகள் வெளிவந்தன. இச்செய்திகள் ஈரான தனது யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்த முனைகிறது எனக் கருதப்படுகிறது.

ஈரானின் எறிகணைத் தொழில் நுட்ப வளர்ச்சி நிண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்த்தமை போன்றவை இஸ்ரேலை மிகவும் கரிசனை கொள்ள வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. இது தனக்கு எதிரான கடும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியரகளை தனக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்யும் என்பதாலும் அமெரிக்கா தயக்க காட்டுகிறது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானுக்கு எதிரான் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தின. அவற்றையும் மீறி ஈரன் தனது அணுக் குண்டு உற்பத்தித் திட்டத்தை நகர்த்தி வருகிறது.

ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் துறை மூலமும் வேவு பார்க்கும் ஆளில்ல விமானங்கள் மூலமும் கண்காணித்து வருகின்றன. தான் பல ஆளில்லா விமானங்களைக் கைப்பற்றியதாக ஈரான் தெரிவிக்கிறது. பெப்ரவரி 24-ம் திகதி ஈரான் கைப்பற்றியதாகச் சொல்லும் ஆளில்லா விமானம் தொடர்பாகக் கேட்ட போது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.

ஈரான் கைப்பற்றிய ஆளில்லா விமானங்களில் 2011 டிசம்பர் மாதம் 4-ம் திகதி கைப்பற்றிய RQ-170 Sentinel spy drone மிகவும் வலுமிக்கதாகக் கருதப்படுகிறது. தான் கைப்பற்றிய ஆளில்ல விமானங்களை வைத்து reverse engineering தொழில் நுட்பத்தின் மூலம் ஈரானும் ஆளில்லா விமாங்களை உற்பத்தி செய்கிறது. ஈரான உற்பத்தி செய்த ஆளில்லா விமானங்களை லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலை வேவு பார்க்கப் பயன்படுத்துகின்றனர். அப்படி ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்க ஆளில்லா விமானங்களில் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து அறியும் ஈரான்.

அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றிய ஆளில்லா விமானங்களின் குறியீட்டு முறைமைகளை அறிந்து அதன் மூலம் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தனது நாட்டில் இருந்து அனுப்பும் சமிக்ஞைகளை தான் தகவலாக்கி அறிந்து கொள்வதாக ஈரான் தெரிவிக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...