Tuesday, 1 January 2013
புதிதாக எதை நீ கொண்டுவருவாய்?
பதின்பருவத்திற்கு இந்த நூற்றாண்டை
பத்திரமாய் எடுத்துச் சென்றிட
வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதை நீ கொண்டுவருவாய்
இனக் கொலையாளிகளைக் கூண்டிலேற்றுவாயா - களப்
போராளி நாமென வந்து பிரித்தோரை இனம் காட்டுவாயா
நல்லவர் எவரெனத்தான் சுட்டிக்காட்டுவாயா
வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்
சிறையில் வதைபடும் உறவுகளை மீட்ப்பாயா
அடக்குமுறையாளிகளிடமிருந்து விடுவிப்பாயா
கொடியவர் ஆட்சியை ஒழித்துக்கட்டுவாயா
வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்
பாராமுகமும் பாராபட்சமும் நிறைந்த ஐநா
விடுதலைப் போரைப் பயங்கரவாதமென்னும்
பன்னாட்டுப் பன்னாடைக் கூட்டம்
இவ்வாண்டில் மாறிடுமா எம்மினம் தேறிடுமா
வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்
அடுத்துக் கெடுத்து கொன்றொழித்து
மீண்டும் முளைக்காமல் வேரோடழிக்கத்
துடித்து நின்று துரோகம் செய் இந்தியாவை
மாற்றி விடுவாயா மாட்சி தருவாயா
நம்பிக்கையுடன் நாம் திரண்டால்
ஒற்றுமையுடன் நாம் எழுந்தால்
நாளை மலரும் எம் ஈழம்
அதன் பின்னர் மலரும் ஒவ்வொரு நாளும்
புத்தாண்டாகும். புதிதாகும் எம் நிலம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
1 comment:
அதிகப்படியாக எதுவும் வேண்டாம் பிரிந்து நின்று கதறும் தமிழினத்தை ஒன்று சேர்த்து விடு அதுவே மற்றய தேவைகளுக்கு வழி சமைக்கும்
Post a Comment