Saturday, 27 October 2012
இணைவோம் எழுவோம் வெல்வோம்
ஓயாத அலைகளாய் சாயாத மலைகளாய்
தாழாத நிலைகளாய் சோராத தோள்களாய்
அணையாத தீயென நில்லாத காற்றென
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்
கீர்த்தியில்லாச் சில்லறைகள் உற்சவ மூர்த்திகள் நாமெனச்
உருத்திரம் கொண்டாலும் பிரிந்து நின்றாலும்
பிளவு பட்டாலும் நிலையது குலையோம் நிமிர்ந்து நிற்போம்
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்
எத்தனை பகை வரினும் எத்தனை இடர் வரினும்
எழ எழ வீழ்த்துவோம் என இந்தியா நின்றாலும்
விழ விழ வீறு கொண்டெழுவோம் வேங்கைகள் நாமாவோம்
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்
பெருமரமாகும் சிறு வித்துக்களாய் நாம் வருவோம்
ஆழ்கடல் சென்றெடுத்த நன் முத்துக்களாய்
களங்கமடையோம் பெருமைகள் சேர்ப்போம்
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்
தாயகத்துக் கனவுடன் மாவீரர்களாய் மரித்து
வானகத்துறையும் கானகத்து வேங்கைகளின்
கனவினை நனவாக்கிட துணிவோம் துணிவோம்
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

2 comments:
kanavathu nanavaga emathu thunaiyathu endrum unakku . velga thamizh !
வீழ்வது எழுவதற்கே. எம் மாவீரரின் கனவினை நனவாக்க ஒன்று பட்டு எழுவோம். அவர்கள் சுமந்த இலட்சியக் கனவினை எம் தோள் தாங்கி முன்னெடுத்துச் செல்வோம்.
Post a Comment