Saturday, 15 September 2012
எமது நிலம் எமக்கு வேண்டும்
யாழிசைக்குப் பரிசாகி மீனிசைக்கு வசமாகி
தமிழிசைக்குக் களமாகி மழலையிசை தேனாகி
புள்ளிசை காதினிக்க இல்லற நெறியிசைக்க
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
ஆழ்கடல் முத்தெடுத்து சூழ்கடல் உப்பெடுத்து
மீன் வளச் சொத்தெடுத்து பாய்மரக் கப்பலெடுத்து
திரைகடல் கடந்து சென்று செல்வஞ் சேர்த்தெடுத்து
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
கால்நடைகள் உறவாக களனியது தாயாக
மழைத் துளிகள் பரிசாக வியர்வைத்துளிகள் வித்தாக
நீர்வளங்கள் தெய்வங்களாக வளர்த்த பயிர் விருந்தாக
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
அற வழி பொருளீட்டி அன்பு வழி ஆனந்தம் கூட்டி
மழலையர்க்கு மரபு காட்டி பண்பார்ந்த வாழ்வு காட்டி
நற்றமிழ் மொழி பேசி நானிலத்திற்கு வழிகாட்டி
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
கதிரது நாளை உதிக்க கீரி மலையோடு திருமலை
எரிமலையாய் வெடிக்க விடுதலைத் தீ எரிய
படுவான்கரையும் எழுவான் கரையாய் மாற
ஈழ நிலமெங்கும் எதிரி விழுவான் நிரையாக - அன்று
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கே ஆகும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
2 comments:
அருமை. நிச்சயாமாய் எமது நிலம் எமக்கு வேண்டும். சத்தியமாய் நாம் வாழ்ந்த நிலம் எமக்கே ஆகும். நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்.
தமிழன் வாழ்ந்த நிலம், ஆண்ட நிலம் ஈழம். இதில் தமிழன் மீண்டும் வாழவேண்டும், ஆளவேண்டும்.
Post a Comment