நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
என்னைக் கடந்து ஓடுகின்றனர்
என்னில் இடறி விழுகின்றனர்
உயிரில்லாச் சிறு உடலை
கையிலெடுத்துக் கொண்டு
உயிரைப் பிடித்துக் கொண்டு
தலை தெறிக்க ஓடுகின்றார் ஒருவர்
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
என் உடலெங்கும் பெரும் வலி
எங்கு வலி என்று சொல்ல முடியவில்லை
எல்லா இடத்திலும் வலி
யாரும் யாருக்கும் உதவவில்லை
விண்ணில் மிகையொலி இரைச்சல்
மண்ணின் அவல ஓலத்தில்
அடங்கிப்போய் விடுகிறது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
நன்கு தெரிந்த வீதிகள்
உருத்தெரியாமல் சிதைந்து போனது
திசையே தெரியாமல் இருக்கிறது
நாதியற்ற இனத்தின்
திக்கற்ற நிலைதான் இது
போக என ஒரு இடமில்லை
போகத்தான் முடியுமா
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
வரண்டு போனது நாக்கு
தேடிப்பார்க்கிறேன்
அங்கு ஒரு வாய்க்கால்
அதை நாடிப் போகிறேன்
தட்டுப்பட்டது ஒரு சிறு கை
தவழ்கிறேனா ஊர்கிறேனா
எனக்கே தெரியவில்லை
ஆனால் அசைகிறேன்
வாய்க்காலை நொக்கி
ஆனால் வாய்க்கால் சிவந்திருந்தது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
பொழுது சரிந்துவிட்டது
சூரியனும் மறைந்து விட்டது
கந்தகப் புகையினூடே
தெரிகிறது ஒரு செய்மதி
என் கண்கள் மூடிக் கொள்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

2 comments:
//வரண்டு போனது நாக்கு
தேடிப்பார்க்கிறேன்
அங்கு ஒரு வாய்க்கால்
அதை நாடிப் போகிறேன்
தட்டுப்பட்டது ஒரு சிறு கை
தவழ்கிறேனா ஊர்கிறேனா
எனக்கே தெரியவில்லை
ஆனால் அசைகிறேன்
வாய்க்காலை நொக்கி
ஆனால் வாய்க்கால் சிவந்திருந்தது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
///
அழகான வரிகள்
மனதை நெகிழ வைக்கும் வரிகள்...
Post a Comment