கரிய இருளினில் கடினவழியினில்
நேற்று நாம் நடந்தோம்
கொடிய போரினில் அரிய ஊரினில்
அனைத்தும் நாம் இழந்தோம்
வாழ்ந்த மனையினில் ஆழ்ந்த துயரினில்
தாழ்ந்து நாம் சரிந்தோம்
பச்சிளம் குழவியும் பட்டிளம் கன்னியும்
பாதகர்க்கு இரைகொடுத்தோம்
கருவிலும் கருகிட உருவின்றிப் பொசுங்கிட
செருவினில் நாம் வீழ்ந்தோம்
சூழ்ந்திட்ட பகையின் சூழ்ச்சிவலையில்
சீக்குண்டு நாம் தாழ்ந்தோம்
ஒன்றுபடா குணத்தில் கூறுபட்ட நிலையில்
இழக்கக் கூடாததெல்லாம் இழந்தோம்
வாய்பொன்று வருகுது ஒளியொன்று தெரியுது
வீழ்ச்சியது நிலையிலை என உணர்வோம்
வீறு கொண்டு நாம் எழுவோம்
தலைப் பா பாடிட தலைப்பாகை கிடைத்திட
தலைவன் வழி நீ நட
மாட்சியினைத் தேடி மீட்சியினை நாடி
ஆட்சியினை நாம் எடுப்போம்
இனிவா வாழ்வென துணிவாய் நீ எழ
ஜெனிவா நகர் அதிரும்
பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில்
நாம் திரள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment