Friday 2 March 2012

பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில் நாம் திரள்வோம்

கரிய இருளினில் கடினவழியினில்
நேற்று நாம் நடந்தோம்
கொடிய போரினில் அரிய ஊரினில்
அனைத்தும் நாம் இழந்தோம்
வாழ்ந்த மனையினில் ஆழ்ந்த துயரினில்
தாழ்ந்து நாம் சரிந்தோம்
பச்சிளம் குழவியும் பட்டிளம் கன்னியும்
பாதகர்க்கு இரைகொடுத்தோம்
கருவிலும் கருகிட உருவின்றிப் பொசுங்கிட
செருவினில் நாம் வீழ்ந்தோம்
சூழ்ந்திட்ட பகையின் சூழ்ச்சிவலையில்
சீக்குண்டு நாம் தாழ்ந்தோம்
ஒன்றுபடா குணத்தில் கூறுபட்ட நிலையில்
இழக்கக் கூடாததெல்லாம் இழந்தோம்
வாய்பொன்று வருகுது ஒளியொன்று தெரியுது
வீழ்ச்சியது நிலையிலை என உணர்வோம்
வீறு கொண்டு நாம் எழுவோம்
தலைப் பா பாடிட தலைப்பாகை கிடைத்திட
தலைவன் வழி நீ நட

மாட்சியினைத் தேடி மீட்சியினை நாடி
ஆட்சியினை நாம் எடுப்போம்
 
இனிவா வாழ்வென துணிவாய் நீ எழ
ஜெனிவா நகர் அதிரும்
பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில்
நாம் திரள்வோம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...