சிந்து நதிக்கரை தொடங்கிய பயணம்
தென்பொதிகை மலை தவழ்ந்த பயணம்
குமரி முனையையும் கடந்த பயணம்
கதிர மலையிலும் கமழ்ந்த பயணம்
பாரெங்கும் பயந்தொடிய பயணம்
இன்றும் தொடர்கின்றது
ஆங்கிலக்கால்வாயையும்
பனிமலைகளயும் தாண்டி
நீதிக்கான நெடும் பயணமாய்
உரிமையிழந்துவிட்டான் இவன்
உடமையிழந்துவிட்டான் இவன்
வீழ்ந்து விட்டான் இவன்
இனி எழும்ப மாட்டான் இவன்
Hobson choice என்னும்
கொடுத்ததை வாங்கும்
பிச்சைக்கார நிலை இவன் நிலை
என எள்ளி நகையாடிய
பார்ப்பனிய விமர்சகர்கள்
முகத்தில் கரி பூச
நீதியை நோக்கி கடமை கண்ணாக
நீண்ட நெடும் பயணம் தொடர்கின்றது
அடுத்துக் கெடுத்த அயல் நாட்டையும்
துணையென வந்து துரோகியானோரையும்
தீர்க்கவென வந்து தீர்த்துக் கட்டியோரையும்
எந்தையும் தாயும் தந்தை நாடென நம்பிய
பாரததேசம் பாதக தேசமானதையும்
சிந்தையில் சுமந்து கடமை கண்ணாக
நீண்ட நெடும்பயணத்தைத் தொடர்கின்றான்
நீதியை வேண்டி நடக்கின்றான்
எத்தனை தூரம் நடந்தாலும்
எத்தனை நாடுகள் கடந்தாலும்
எந்தனை மன்றுகளின் முன்றலில்
நின்று கூக்குரலிட்டாலும்
நான் வாழ்ந்த காலத்தில்
நம்மவர் மூன்று இலட்சம் பேர்
கொடூரமாகக் கொல்லப்பட
கையாலாகாதவனாய்
நின்ற என் பாவம் என்றும் தீராது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment