Saturday 3 December 2011

கடைந்தெடுத்த SMS நகைச்சுவைகள்

கண்கள் பேசிக்கொண்டால்: காதல்
கண்ணீர் பேசிக்கொண்டால்: அனுதாபம்
ஆயுதங்கள் பேசினால்: போர்
பலர் பேசினால்: பாராளமன்றம்
நீ மட்டும் பேசினால்: பைத்தியம்.

மனித மூளை என்பது ஒரு அற்புதமான கருவி
நாம் பிறந்ததில் இருந்து வேலை செய்யும்
365 நாளும் 24 மணித்தியாலமும் வேலை செய்யும்
ஆனால் தேர்வு வினாத்தாளைப் பார்த்தவுடன் வேலை செய்ய மறுக்கும்.

அவள் மீது காதல் கொண்டதில் இருந்து
நான் புகைப்பதில்லை மது அருந்துவதில்லை
அவள் உன்னைத் திருத்தி விட்டாளா
இல்லை எனது பணத்தைக் காலி செய்துவிட்டாள்.

It’s Sad For A Girl
To Reach An Age When
Men Consider Her
CHARMLESS
But
Its Worse For A Man
To Reach An Age When
Girl Considers Him
HARMLESS ..

கண்ணீர் வரவைப்பவை:
  - காதலில் உடைந்த இதயம்
  - பிரிந்த நட்பு
  - மறைந்த உறவு
  - உரித்த வெங்காயம்

அழகு என்பது வெளித் தோற்றத்தில் இல்லை
அது உனக்குள் இருக்கிறது
எனவே
உன் உள்ளாடைகளை அடிக்கடி துவைத்துச் சுத்தப்படுத்து

அரசியல் சமையல்:
பணம் பல கோடி
ஏமாளிகள் சில கோடி
தாதாக்கள் இருபத்தைந்து
கைக்கூலிகள் சில ஆயிரம்
பொய் தேவையான அளவு


உண்மையில் வாயில்லா சீவன்களைக் கொன்று புசிப்பவர்கள் யார்?
சைவச் சாப்பாடுக்காரர்கள். ஆட்டுக்கும் கோழிக்கும் மாட்டுக்கும் வாய் உண்டு தாவரங்களுக்கு இல்லை.

கழிப்பறையில் ஒரு அறிவிப்பு:
என்னைத் துப்பரவாக இருக்க விடுங்கள்
என்னை அழுக்காக்காதீர்கள்
அதற்கு நன்றிக் கடனாய்
நான் பார்ததை யாரிடமும்
சொல்ல மாட்டேன்

வரிசை மாறினால் கருத்து கந்தல்:
......ஆனால் உன்னை விரும்புகிறேன்.
உன்னை விரும்புகிறேன் ஆனல்.......

உனக்கும் நடக்கும் பொறுத்திரு
ஒரு நாள் அழகிய பெண் உன் வாழ்வில் வருவாள்
உன்னைப் பிடித்திருக்கிறது அப்பா என்பாள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...