Saturday 19 November 2011

மாவீரர்களே இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்

நீரின்றி சோறின்றி 
நித்திரையின்றி நிம்மதியின்றி
மண் மீட்புக்கு உயிர் கொடுத்த
தியாகச் செம்மல்களேஉம்மைப் புதைக்கவில்லை
மீண்டும் வர விதைத்தோம்
என்று கதைத்தோம் கண்ணீர் விட்டோம்
இன்று உம் நினைவை உதைக்கின்றோம்
உங்கள் ஆன்மாக்களையும் வதைக்கின்றொம்

எதிரி உம் சின்னங்களைத்தான் சிதைத்தான்.
இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்


தண்ணீர் விட்டு வளர்க்காமல்
கண்ணீர் விட்டு தம் நாட்டுச்
சுதந்திரம் பெற்றவர்க்கு
உயிர் நீர் விட்ட
உம் தியாகம் புரியவில்லை

கையாட்கள் மூலம்
கைவரிசை காட்டுகின்றனர்
புலத்திலும் ஒரு முள்ளி வாய்க்காலுக்கு.

ஒன்று படுத்த எதுவும் செய்யாமல்
இன்று ஒன்றாகச் செய்யுங்கள்
ஓரிடத்தில் நன்றாகச் செய்யுங்கள்
என்று சொல்கிறோம் நாம் இங்கு
உங்கள் காதும் புளித்திருக்கும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...