சிந்து நதிக்கரை உருவானது
தென் பொதிகையில் தவழ்ந்தது
குமரி முனையையும் கடந்தது
கதிர மலையிலும் கமழ்ந்தது
தமிழா உன் குடும்பம் பெருமைக்குரியது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
கங்கையும் கொண்டது
கடாரமும் வென்றது
கலிங்கத்தைக் கலங்கடித்தது
சிங்களத்தைச் சிதறடித்தது
தமிழா உன் குடும்பம் வீரம் விளைத்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
கலைகள் அறுபத்து மூன்று கொண்டது
ஏற்றம் மிகு இலக்கணம் கொண்டது
பொது மறையை வையகத்திற்குத் தந்தது
தமிழா உன் குடும்பம் அறிவு நிறைந்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
வேற்றுமையை வேரோடு அறுத்திடு
புல்லுருவிகளைப் புறக்கணித்திடு
ஒன்று பட்டு பலத்தை வளர்த்திடு
தமிழா உன் குடும்பம் மேன்மை பெற்றிடும்
முள்ளி வாய்க்கால் உன் குடும்பத்தின்
முடிவல்லத் தமிழா
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...


1 comment:
அருமைங்க.....
Post a Comment