Wednesday, 21 September 2011
கவிதை: பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-ஃபோனடி
ஓரப் பார்வையால் என்னை ஒளிப்பதிவு செய்வதால்
அழைப்பு விடுப்பதால் குறுந்தகவல்கள் அனுப்புவதால்
காமச் செயலிகள் பல கொண்டிருத்தலால்
பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-போனடி
தொடர்பு தேடித் துடிப்பதால்
சைகை நாடித் தவிப்பதால்
தகவற் பரிமாற்றம் செய்வாதால்
காதலும் கைப்பேசி போலே.
நாமே காதல் வெள்ளம்
நீரும் நீரும் போல் எம்
உள்ளங்கள் இணைந்தன
காற்றும் காற்றும் போல் எம்
எண்ணங்கள் இணைந்தன
பைரவியில்
ஆனந்தம் இணைந்தால்
சிருங்கார ரசம் பேசும்
சின்ன விழிகள்
காந்தமாகும்
துடிக்கும் விரல்கள்
தவிக்கும் உதடுகள்
தொடக்கத் துணிவிருந்தால்
நிறைவேற்றும் வல்லமை
தானே வரும்.
கடவுளாரின்
தவறான படைப்புக்களை
திருத்த முயன்று
தோல்வி கண்டன
மதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
3 comments:
எல்லாம் சூப்பர்.. அதென்ன பாஸ் கடைசியில ஒரு படம்???
கவிதை கலக்கல். முதலாவது படத்தை பார்ர்க்கும்போது இஞ்ச ஏதோ சொல்லுது.
கடைசிப் படம் கடவுளாரின்
தவறான படைப்புக்கள்...
Post a Comment