![]() |
செல்வந்தரின் வாழ்வின் இறுதிக்கட்டம். மருத்துவப்பட்டம், சட்டவாளர் பட்டம், கணக்காளர் பட்டம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்கள் மூன்றையும் கையில் வைத்துத் தடவியபடியே முகத்தில் ஒரு திருப்தியுடன் காணப்பட்டார் அந்தச் செல்வந்தர். அதைப் பார்த்த மருத்துவருக்கும் சட்டவாளர்க்கும் கணக்காளருக்கும் ஆச்சரியம். இதில் என்ன அப்படி ஒரு திருப்தி என்று அவர்கள் அச்செல்லவந்தரிடம் ஆச்சரியத்துடன் கேட்டனர். "என்னை வாழ் நாள் முழுவதும் ஏமாற்றியவர்கள் இம்மூன்று வகையினரும். எனது இறப்பில் என்னுடன் சேர்ந்து அவர்களில் மூவர் இறக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிய திருப்தி" என்றார்.
2 comments:
nice
அப்படி அந்த மூணு பேரும் ஏமாத்தியும் சாகும்போது அவர் செல்வந்தராக இருந்தது பெரும் விந்தையே.
Post a Comment