Wednesday 15 September 2010
ஹைக்கூ கவிதைகள்: பாடாத பாட்டொன்று காதில் கேட்கிறது
பாடாத பாட்டொன்று காதில் கேட்கிறது
தெரியாத அழகொன்று கண்ணில் தெரிகிறது
காதல் வந்தது.
பாடத்திட்டம் முடிப்பவர் சிலர்
பள்ளியிலேயே இறப்பவர் பலர்
அனுபவப் பாடசாலை
உணவு பற்றி தீர்மானிக்கின்றன
நாலு சிங்கங்களும் ஒரு ஆடும்
தேர்தல்
தேவையில்லாதவன் ஏற்பது
தேவையற்றவன் மறுப்பது
அறிவுரை
அறியக் கடினமானது
ஏற்றுக் கொள்ள சிரமமானது
யாதார்த்தம்
நீண்ட ஆயுள் வேண்டுமா
நல்லதைச் செய் நல்லதைச் சொல்
வள்ளுவனும் காந்தியும் இறக்கவில்லை
பயன்படுத்தினால் பெருகும்
தவறவிட்டால் கிடைக்காது
சந்தர்ப்பம்
பல மூடர்களைன் வெற்றி
சில அறிவாளிகளின் தோல்வி
மக்களாட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment