
முன்பெல்லாம் ஒரு வீட்டுக்குத் திருடப் போவதென்றால் அதன் பின்புறமுள்ள பாதைகள் தப்புவதற்கான வழிகள் பற்றி அறிந்து கொள்வதற்கு திருடர்கள் மிகுந்த சிரமப்பட வேண்டும். இப்போது கூகிளில் இந்தத் தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். 50 வருடங்களுக்க்கு முன்பு கிழக்கு ஜேர்மன் அரசு தனது நாட்டு மக்களைப் பற்றிய தகவல்களை பல கோடி செலவளித்து திரட்டியது. இப்போது அத் தகவல்களை இலகுவாகத் கூகிள் மூலம் எந்தச் செலவுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
எம்மைப் பற்றிய தகவல்களை எமது விருப்பத்திற்கு மாறாக கூகிள் திரட்டுகிறது, எமது அந்தரங்கத்துள் மூக்கு நுழைக்கிறது என்ற குற்றச் சாட்டுக்கள் கூகிள் மீது பாய்கின்றது இப்போது.
இனி வரும் காலங்களில் தனிமனித அந்தரங்கம் என்று ஒன்று இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்வி எழுகிறது.
இனி பலர் தமது பெயர்களை மாற்றித்தான் இணைய உலகில் உலாவவேண்டி வரும். அல்லாவிடில் நிலமை மோசமாகிவிடும். கடைத் தெருவில் ஒரு பெண்ணைக் கண்டால் அப்பெண்ணை கைப்பேசி மூலம் படமெடுத்து உருஇனங்காணும் மென்பொருள் மூலம் அவரை அடையாளம் கண்டு. பின்னர் fஎஸ்புக்கிலோ அல்லது வேறு சமூகத் தளங்களிலோ அவர் பற்றிய சகல தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
தொழில்நுட்பம் வளர எமது அந்தரங்கள் இழக்கப்படுகின்றன.
1 comment:
eppadiyellam yosikkirang...
Post a Comment