
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
நெஞ்சோரத்தில் ஒரு கனப்பு
உள்ளமெங்கும் உன் நினைப்பு
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
விழியோரத்தில் ஒரு நனைப்பு
இதயத்தில் ஒரு வலிப்பு
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
என்னருகில் இன்று நீ இல்லை
என்படுக்கையில் ஒரு இடைவெளி
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
கைகளிணைய கால்கள் உரச
ஆடிய நடங்கள் ஓய்ந்து விட்டன
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
பார்வைகளால் வந்த அம்புகள்
வார்த்தைகளால் வந்தன
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
ஏறிப்போன் கடனட்டை நிலுவைகள்
கனவுகள் ஏறின சிலுவைகள்
என்றும் போல் இன்றும் புலர்ந்தது - ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
உறைந்த பனியில் கருகிய தளிராய்
ஏன் மறைந்தது நம் உறவு
No comments:
Post a Comment