
சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்க இலங்கையின் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒல்லாந்துக்கு ஒரு பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அவரை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கைது செய்து விசாரிக்கும் படி நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் சமர்க்கிப்பட்ட சாட்சியங்கள் போதாது என்று அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப் பட்டது.
இன்று நடக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் இலங்கை சார்பில் மஹிந்த ராஜபக்சே அவர்கள் பெரிய பரிவாரத்துடன் பங்கு பற்றுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. பின்னர் அது காரணங்கள் தெரிவிக்காமல் இரத்துச் செய்யப்பட்டு விட்டது. அவர்மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கப் படும் சாத்தியம் நிறைய உண்டு. இலங்கைப் போரில் உடல் சிதறடிக்கப் பட்டு கொல்லப் பட்ட ஆயிரக் கணக்கான குழந்தைகளின் பல படங்கள் ஆதாரமாக உண்டு. தமிழர்மீதான் அட்டூழியங்களுக்கான காணொளிக் காட்சிகள் பல உண்டு. தமிழர் மீதான கோடூரங்களை நேரில் கண்ட சாட்சியங்கள் உண்டு. ஆகவே மஹின்த மீது வழக்குத் தொடுக்கப் பட்டு அவர் அமெரிக்காவில் கைது செய்யப் படும் சாத்தியம் உண்டு. இதற்க்குப் பயந்துதான் அவர் அமெரிக்கா செல்லவில்லையா?
No comments:
Post a Comment