
நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அதற்காக 14-08-2009 வெள்ளிக் கிழமை இரவு அவர் அமெரிக்காவின் நியூஜெர்சி நியுவார்க் விமான நிலையம் சென்று இறங்கினார்.
விமான நிலையத்தில் அவரை அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அவரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரம் விமான நிலையத்தில் சிறை வைத்தனர்.
ஷாருக் கான் ஒரு நடிகர் என்று எவ்வளவோ விளக்கம் அளித்தும் ஏற்கவில்லை.
இது பற்றி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் எட்டியதும் அவர்கள் விரைந்து சென்று விளக்கம் அளித்து ஷாருக் கானை விடுவித்தனர்.
கான் என்ற பெயர் இருந்ததமைக்காக ஷாருக் கானுக்க்கு இப்படி அநியாயம் செய்த அமெரிக்காதான் தன்னை மனித உரிமை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று துடிக்கிறது என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே புலம்பியுள்ளார்.
No comments:
Post a Comment