
இலங்கையில் போர் மும்முரமாக நடந்து கொண்டு இருந்த வேளை இராணுவ முகாம் ஒன்றுக்குள் சென்ற பாதிரியார் ஒருவர் தற்செயலாக பல இறந்த உடல்கள் உள் உறுப்புக்கள் அகற்றப் பட்ட நிலையில் இருந்ததை காண்டு அதை தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் பாரிய மனித உறுப்புகளுக்கான வைப்பகம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததும் வெளிவந்ததோடு 10,000 சோடிக்கண்கள் ஏற்றுமதி செய்யப் படும் என இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் நாடொன்றிற்கு வாக்குறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
அயல் நாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்கள். படுகாயமடைந்த அப்பாவித்தமிழர்களை கொன்று அவர்களின் உறுப்புக்களைத் திருடியதாகவும் செய்திகள் வந்தன.
இலங்கை இராணுவத்தினர் வெளியிட்ட கொல்லப் பட்ட விடுதலைப் புலிகளின் படங்கள் பல கண்கள் மறைக்கப் பட்டு இருந்தன.
இப்போது அதிர்வு(www.athirvu.com) இணையத்தளம் இலங்கையில் கொல்லப் பட்ட தமிழர்களின் பல படங்களை வெளியிட்டுள்ளது. அவை மனதைக் கலங்கடிக்கும் தன்மையுள்ளன. அப்படங்களைப் பார்க்கும் போது மனித உறுப்புத் திருடப் பட்டு இருப்பது சில இறந்த உடல்களைப் பார்க்கும் போது தெரியவருகிறது.
3 comments:
Srilanka badly needs some foreign earnings......
It is new way making export earning...
It is only a tip of the ice-berg.....many more to come...
Post a Comment