Thursday 26 February 2009

இந்தியாவின் இன்னுமொரு கபட நாடகம் - மருத்துவக்குழு

போர் முனையில் பல்லாயிரக் கணக்கான சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் காயப்பட்டுள்ளனர். வரும் தினங்களில் இது பல மடங்காக அதிகரிக்கலாம். பல அமைப்புக்களிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் வரும் யுத்த நிறுத்தக் கோரிக்கைகள் இனி வரும் வாரங்களில் இன்னும் தீவிரமடையலாம். அதற்கு முன் யுத்தத்தில் முன்னேறுவதற்கு பல படையினரை சிங்கள அரசு களமுனைக்கு அனுப்ப வேண்டும். இதனால் ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே பெருமளவில் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி காயப்பட்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு சிகிச்சை அளிக்க உதவியுள்ளது. தமிழர் படையினரின் தீவிர தாக்குதலால் பல படையினர் காயமடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை சீர் செய்யு முகமாக இந்தியா பல மருத்துவர்களை காயப்பட்ட தமிழர்களுக்க உதவுவது என்ற போர்வையில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...