Saturday 28 February 2009

தவித்து நிற்கும் தமிழ்நாட்டு உறவுகள்

தமிழநாட்டு உறவுகள் எம இரத்தப் பிணைப்புக்கள்
ஈழத்தோர் துயர்கண்டு துடிக்கின்றன துவள்கின்றன
சிதறும் சிறார்களைக் கண்டால் கல்லும் உருகும்
தமிழன் நெஞ்சு தவிக்கும் துடிதுடிக்கும்
உண்ணா விரதம் இருக்கின்றனர்
கொட்டும் மழையில் கைகோத்து நிற்கின்றனர்.
தீக்குளித்து இறந்தும் மடிகின்றனர்.
யாது பயன் இதனால்? என்னதான் நடக்கும்,?
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளும்
சிங்களப் பேரினவாதிகளும் இணைந்து நிற்கின்றனர்.
தமிழ்த் தேசியத்தை அழிக்க! கருவறுக்க!
பார்பனசக்திகள் தூபம் போடுகின்றன
பொய்ப் பரப்புரை பல செய்கின்றன.
தமிழநாட்டு உறவுகள் தவித்து நிற்கின்றன
செய்வதறியாமல் திகைக்கின்றன.
இதனால் அடி சிங்களவனை என்று
ஒரு தடியைத் தன்னும் தூக்கிக்
கொடுக்க முடியுமா ஈழத்தவனுக்கு?
முடியாதே தேச விரோமானதே!
ஆரியப் பேய்கள் தடுத்திடுமே
சிறையில் தள்ளிடுமே!
சுயநிர்ணய உரிமை தேவை தமிழனுக்கு

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...