Sunday 14 December 2008

நம்பிக் கை கொடு நம்பிக்கையோடு

வன்னிக்கள நிலை பாரீர் - எம்மவர்
எண்ணிக்கை யிலாத் துயர் கேளீர் - அங்கு
குண்டோடும் செல்லோடும்
நீரோடும் பாம்போடும் - தினம்
போராட்டம் - பெரும்
திண்டாட்டம்

விண்ணில் ஒரு விமானம் பறக்கும் -உடன்
மண்ணில் பல தமிழ் உயிர் இறக்கும்
தாயென்றும் சேயென்றும் - சிறு
சிசுவென்றும் பசுவென்றும் - பல்லுடல்
சிதறும் - மனம்
கதறும்

கொக்கரிக்குது அந்த பேரினவாதம் - அது
எச்சரிக்குது எமைத் தினந்தோறும்
பொய்யோடும் புரட்டோடும்
புளுகோடும் உருட்டோடும்
கதைபல கூறும்
பத்திரிகைகள் நாறும்

கோசலை மகன் பெயரோடு ஒரு நாயோன்
கோள்கள் பல கூறும் கோணல் வாயோன் - அந்த
சிங்களரத்தினா எத்தனைநாள் - எமக்கெதிராய்
கத்தினான் கதைபல சுத்தினான் - தருணம்
பார்ப்பான் - பழி
தீர்ப்பான்

அப்பன் முருகன் பெயரொடு ஒரு சாமி
வந்தான் அந்த பெரும் புரட்டு ஆசாமி – அந்த
ஆரியன் பெரும் பேயன்
முழுவிசரன் கடும் பொய்யன் - நிற்ப்பான்
சிங்களப் பக்கம் - செல்வான்
கீழப்பாக்கம்

முட்டைக் கண்ணோடு ஓரெழுத்து நாமன்
தமிழர் நெற்றியில் போடுவான் நாமம் - அந்தக்
கோமாளி கொடுங் கேப்மாரி
மெய்மாதிரிப் பொய்மாரி
பொழிவான் - ஒருநாள்
அழிவான்

தமிழர் போராட்டமிங்கு வெல்லும் - உந்த
உலுத்தர்க்கு நல்ல பதில் சொல்லும்
பொழுது புலரும் ஈழம் மலரும் - எம்
துயர் தீரும் இடர் போகும் - பெரும்
புகழ் சேரும் தமிழ் வாழும்
நம்பிக் கை கொடு – மன
நம்பிக்கையோடு

1 comment:

Anonymous said...

அன்று தமிழ் மண்னில் இருந்து தோல் கொடுப்பேன் .....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...