Wednesday 18 January 2012

பொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை

காதல் என்பது பொய்யான மோச வலை
குடும்பம் என்பது பொய்யான பாச வலை
உறவு என்பது பொய்யான நேச வலை
வாழ்க்கை என்பதே பொய்யூரில்
நாம் பெற்ற வதிவிட உரிமை



எருவாய்ப் போகும் மெய்யை
பொய்யென்றுணராமல்
கனிவாய் என கருவாய்
மோகம் கொண்டு
நிலை இழப்போமா

கண்ணில் தெரிவதும் பொய்
கண்கள் சொல்வதும் பொய்
மண்ணாய் முடிவில்
மறைவோம் என்பதே மெய்

உடலும் பொய் உறவும் பொய்
சொல்லும் பொய் செயலும் பொய்
உணவும் பொய் நினைவும் பொய்
இறப்போம் நாம் என்பதே மெய்

பொய்யினை மெய்யென்று அலையாமல்
கையினை மெய்யாய்
மெய்க்காக நீட்டி
மெய்யினை மெய்யறிவில் நிறுத்தி
மெய்வழி செல்லும் நாள் என்னாளோ

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...