Saturday 25 December 2010

சிலரின் மரண அறிவித்தல் படிக்க விரும்புகிறேன்



முகத்திற்கு அழகூட்டும்
இதயத்தின் இருப்பை வெளிக்காட்டும்
புன்னகை

கொலைகள் செய்ய
எனக்கு விருப்பமில்லை
சிலரின் மரண அறிவித்தல்
படிக்க விரும்புகிறேன்

நல்ல போருமில்லை
கூடாத அமைதியுமில்லை
என்றான் ஒரு அறிஞன்
மூர்க்கமான போரையும் கண்டோம்
மோசமான அமைதியும் காண்கிறோம்


எல்லோரும் இறப்பது நிச்சயம்
எல்லோரும் வாழ்வது நிச்சயமல்ல
வாழ்வாங்கு வாழ்வது யார்

கண்ணியத்தை அதிகாரம்
விவாகரத்துச் செய்ய
உலகம் அநாதையாகிறது

2 comments:

Anonymous said...

நல்ல போருமில்லை
கூடாத அமைதியுமில்லை
என்றான் ஒரு அறிஞன்

நல்ல கருத்து

Anonymous said...

"அடிதடி கொள்ளை கொலையழிவல்லால் அiதியை உலகில் யார்கண்டார்?
நிதமும் கொலைமேவும் கருவிபலகொண்டு நிலமைபழுதாக உழைப்போர்கள்."
இவ்வரிகள் யாழ் இந்துவின் ஆசிரியர் காலஞ்சென்ற கவிஞர் சொக்கன் நல்லைக் கந்தன் மீது
பாடிய திருப்புகழின் சில வரிகள். இது அரச மற்றும் அரசற்ற சகலரிற்கும் பொருந்தும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...