Friday 13 August 2010

மலேசியாவில் ஒரு மானத் தமிழன்


மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மாண்பு மிகு துணை முதல்வன்
பீனாங்கு மாநிலப் புதல்வன்
கற்றுயர்ந்த கண்ணியவான்
பேராசான் இராமசாமி
உலகத் தமிழர் தலைவன்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்


கோடானு கோடியாகச்
சொத்துச் சேர்க்கவில்லை
ஈழத்தவரை வைத்து
அரசியல் செய்யவில்லை
புதல்வர்க்கு பதவி கேட்டுக்
காவடியெடுக்கவில்லை
ஈழத் தமிழர் துயர்கண்டு
கொதித்தெழுகின்றான்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்

போர்குற்றம் கண்டு
பொங்கி எழுகின்றான்
உலக மனச்சாட்சியைத்
தட்டிக் கேட்கின்றான்
தேர்தல் கூச்சலல்ல
வாக்கு வேட்டைக்கல்ல
வாய்ச்சவாடல் செய்யவில்லை
உண்ணா விரத நாடகமாடவில்லை
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்

மொழி பேசுவோரை
அழிந்தொழிய விட்டு
மொழிக்கு மாநாடு கூட்டி
உமிழ் நீரும் தமிழ் நீரென
தம்பட்டம் அடிப்போரே
மலேசிய மானத் தமிழனின்
கழி நீருக்குத்தன்னும்
நீர் இணையாவீரோ

1 comment:

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலியையும் , உணர்வையும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறது . இதை சார்தவர்களுக்கு இது புரிந்தால் சரிதான் . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...