Thursday 14 January 2010

இந்தியாவால் இறந்த பல்லாயிரம் தமிழர்கள்


கடந்த சில தினங்களாக இலங்கையில் நடந்த போர் தொடர்பாக சில உண்மைகள் வெளிவந்துள்ளன:

1. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மஹிந்த ராஜபக்சே உதவினார் என்று இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

2. வி எஸ் சுப்பிரமணியம் என்னும் அரசியல் விமர்சகர் இலங்கை ஆகஸ்ட் மாதம் முடிக்கவிருந்த போரை இந்தியா மே மாதம் முடிக்கச் சொல்லிவற்புறுத்தியது என்று எழுதியுள்ளார்.

3. இறுதிப் போரில் 27,000 சிங்களப் படையினர் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இவற்றில் இருந்து தெரியவரும் உண்மைகள்:

  • இலங்கைப் போர் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்தது.
  • தமிழ்நாட்டில் பல தலைவர்களும் தொண்டர்களும் பல் போராட்டங்கள் நடத்தியதால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சுயநிர்ணய உரிமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இல்லை.
  • ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர்.
இறுதிக் கட்டப் போர் ஒரு சிறிய இடத்தில் நடைபெற்றது. அது ஒரு சில சதுர கிலோமீற்றர்கள்தான். நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுதங்களை அங்கு பாவிக்க முடியாது. அந்நிலையில் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து ஆடிய நாடகம்தான் கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாது என்ற பொய். நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதப்பாவனைகளை மட்டுமே இலங்கையும் இந்தியாவும் நிறுத்தின. மற்றக் கனரக ஆயுதங்கள் தாராளமாகப் பயன்படுத்தப் பட்டன. குறுகிய இடைவெளியில் சிங்களப் படைகளும் விடுதலைப் புலிகளும் சண்டையிடும்போது சிங்கள விமானப் படைகள் தமது தரைப் படையினர்மீதே குண்டு வீசிய பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்ததுண்டு. அதனால் விமானக் குண்டு வீச்சும் இறுதிக் கட்டத்தில் நடக்கவில்லை. ஆனால் டாங்கிகள் மக்கள் மேல் ஏறிச்சென்றன.

போரில் பல சிங்களப் படை வீரர்கள் உயிரிழக்கும் போது போரை நிறுத்துவது சிங்களவர்களின் வழக்கம். ஆனால் மாறாக இவ்வாண்டின் முற்பகுதியில் போர் இடைவிடாது தொடர்ந்து நடக்க இந்தியாவில் இருந்து எத்தனை இந்தியப் படைவீரர்கள் இலங்கைச் சண்டையில் நேரடியாக பங்கு பற்றினர்? இலங்கைக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய எந்த வகையான ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியது? இந்த உண்மைகள் இனி வெளி வருமா?

3 comments:

Anonymous said...

இந்திய நாய்கள் இன்னும் ஈழத்தில் இருக்கின்றன தமிழர்களைக் கொல்வதற்கு.

Anonymous said...

i agree your point anoymous...

Anonymous said...

உண்மைகள் விரைவில் வெளி வர வேன்டும். அஹிம்சையின் மூகமூடி களயப்பட வேண்டும்.

ஜனா

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...