சமர்களில் தோற்கலாம்
நிலங்களை இழக்கலாம்
அடங்க மறுக்கும்வரை - தமிழன்
தோல்வியடையாதவனே
அடங்காமல் எழுந்தால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்
உதிர்ந்த இலைகள் உரங்களாகும்
விழுந்த விதைகள் முளைத்தெழும்
கோட்டைகள் சிதையலாம்
கருங்கற்கள் மறைவதில்லை
வீழ்சியிலே மீட்சியின் வித்துண்டு
என உணர்ந்து கொண்ட்டால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்
வென்ற பின்னும் மார்தட்டிய பின்னும்
பெரும் தோல்வி மனப்பான்மைய
எதிரியிடம் இன்று நாம் காண்கிறோம் - இத்தனையும்
இழந்த பின்னும் தோல்வியடையா நிலையை - நாம்
உலகிற்கு உணர்த்தி நிற்ப்போமானால்
துணிவில் உயர்ந்து நிற்போமானால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்
விழுந்தால் நிலமே எல்லை
உயர்ந்தால் எல்லையே இல்லை - தமிழன்
ஒன்றுபட்டால் உலகே அவன் காலடியில்
ஒன்றுபட்டு வீறு கொண்டெழுந்தால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்
எழுவோம் நாமென்று எதிரியும் அறிவான்
அதனால் வைக்கின்றான் 13-ம் பொறி
இழுத்தடித்து இழுத்தடித்து
எம்மை மாட்ட வைக்கப் பார்கின்றான்
அறிவு துணைக் கொண்டு நிலைதனை உணர்ந்து
நிலமே பலம் நிலமே வாழ்வு
நிலம் பறிபட்டால் நிலையிழப்போம்
என உணர்ந்து உறுதியுடன் மீள எழுவோம்
உணர்வுடன் ஒன்றுபட்டுப் பொங்கினால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்
எம் நினைவெல்லாம் ஈழக் கனவானால்
எம் செயலெல்லாம் அதன் வழி நின்றால்
தடைகளும் பொடிபடும்
வல்லரசுகளும் வழி விடும்
மலர்ந்திடும் நம் தேசம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...

No comments:
Post a Comment