Friday 24 May 2013

ஒன்றாக நிற்காவிடில் வெல்ல மாட்டோம்


ஒன்றுடன் ஒன்று ஒத்துவரா
இந்தியாவும் இலங்கையும்
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை

உலகப் பெரு முதலாளித்துவ அமெரிக்காவும்
அரச முதலாளித்துவ செம்மையிலாச் சீனாவும்
தம் போட்டிகளைப் புறம் தள்ளி

ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை


பல முறை மோதிக் கொண்ட பகையாளிகள்
பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பங்காளிகளாகி

ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை


அந்நியர் எம்மைப் பிரித்தாள வேண்டியதில்லை
நாம் பிரிந்து நின்றால் ஆள்வார்கள் எம்மை
இந்த உண்மை நாம் உணர்ந்து
ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம் வீழ்ந்தே மடிவோம்

அடம்பன் கொடி பழமொழி கேட்டுத் திருந்தவில்லை
நண்டுகளின் கதை கேட்டும் திருந்தவும் இல்லை
என்று தான் நாம் ஒன்றாகி நிற்போம்

ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம்
வீழ்ந்தே மடிவோம்

புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
தீயோரைப் நல்வழிப்படுத்தி ஒன்றாக இணைவோம்
வென்றே தோள் கொட்டுவோம்


இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களாக
இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாக ஒலிக்க
இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டப் பசளையாக
ஒன்றாக இணைவோம்
அன்றேல் வெல்ல மாட்டோம்
ஒன்றாக இணைவோம்
ஒன்றாக இணைவோம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...