Friday, 24 May 2013
ஒன்றாக நிற்காவிடில் வெல்ல மாட்டோம்
ஒன்றுடன் ஒன்று ஒத்துவரா
இந்தியாவும் இலங்கையும்
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
உலகப் பெரு முதலாளித்துவ அமெரிக்காவும்
அரச முதலாளித்துவ செம்மையிலாச் சீனாவும்
தம் போட்டிகளைப் புறம் தள்ளி
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
பல முறை மோதிக் கொண்ட பகையாளிகள்
பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பங்காளிகளாகி
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
அந்நியர் எம்மைப் பிரித்தாள வேண்டியதில்லை
நாம் பிரிந்து நின்றால் ஆள்வார்கள் எம்மை
இந்த உண்மை நாம் உணர்ந்து
ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம் வீழ்ந்தே மடிவோம்
அடம்பன் கொடி பழமொழி கேட்டுத் திருந்தவில்லை
நண்டுகளின் கதை கேட்டும் திருந்தவும் இல்லை
என்று தான் நாம் ஒன்றாகி நிற்போம்
ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம் வீழ்ந்தே மடிவோம்
புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
தீயோரைப் நல்வழிப்படுத்தி ஒன்றாக இணைவோம்
வென்றே தோள் கொட்டுவோம்
இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களாக
இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாக ஒலிக்க
இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டப் பசளையாக
ஒன்றாக இணைவோம்
அன்றேல் வெல்ல மாட்டோம்
ஒன்றாக இணைவோம்
ஒன்றாக இணைவோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment