கொடியில் மலரை
யார் விட்டு வைப்பார்
மனதில் உறவை
ஏன் விட்டு வைக்கவில்லை
உன் நாணத்தின் இறையாண்மைக்கு
இரை என் ஆண்மை
காதலின் முள்ளிவாய்க்காலைக்
கண்டதனால்
கவலை முள்வேலியின் பின்
கட்டுண்ட இதயங்கள்
உன் இதயத்தில் ஒளிந்திருப்பவற்றை
புரிந்து கொள்ளத் தேவையடி
இங்கு ஒரு ஹார்ட்டி லீக்
உன் கண்கள் செய்யும் சித்திரவதைக்கு
தேவையடி ஜெனிவாவில் ஒரு தீர்மானம்

No comments:
Post a Comment