Wednesday 6 February 2013

பார்வைகளின் அரவணைப்பு


பார்வைகளின் அரவணைப்பில்
கருவாகி
புன்னகைகளின் அரவணைப்பில்
உருவாகி
உள்ளங்களின் அரவனைப்பில்
பெரிதாகி
கைகளின் அரவணைப்பில்
நிறைவாவது காதல்

வார்த்தைகளால் சொல்ல முடியாதவை
பலவற்றை அரவணைப்பின்
இறுக்கம் எடுத்துச் சொல்லும்

களைப்பை இதமாக்கி
உடல் வலியோடு
மன வலியையும் போக்கி
கரிசனையைப் பகிர்ந்தெடுத்து
உணர்வுகளைப் பொங்கவைக்கும்
இதமான அரவணைப்பு

எத்தனை அரவணைப்புக்கள் வந்தாலும்
தாயின் அரவணைப்பு எதுதான் ஈடாகும்

அரவத்தை அணைத்தது போலாகும்
தீயோரின் அரவணைப்பு

அன்னை மடியில் அன்பின் அரவணைப்பு
உடன் பிறந்தோரின் பாச அரவணைப்பு
உற்றவரின் அன்பு அரவணைப்பு
தோழர்களின் நேச அரவணைப்பு
பொங்கும் மகிழ்ச்சியைப் பகிர அரவணைப்பு
துயரத்தில் தோள் கொடுக்க அரவணைப்பு
காதலுணர்ச்சியைப் பரிமாறும் அரவணைப்பு
வெற்றியைக் கொண்டாட அரவணைப்பு
அரவணைப்பில் மயக்கம்
அரவணைப்பில் தூக்கம்

2 comments:

கும்மாச்சி said...

யப்பா அரவணைப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா?

Unknown said...

மூலிகை முருகன்
http://www.tamilkadal.com/?p=1817
பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவ பாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது. என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம்
http://www.tamilkadal.com/?p=1817

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...