கண்களில் நீர் முட்டியது
நெஞ்சில் தீ மூட்டியது
உறவு மண்ணானது
இதயம் பெரு வெளியானது
நினைவு காற்றாகியது
ஐம்பூதமானது உன் பிரிவு
வாய்களில் வார்த்தையில்லை
கண்களில் ஒளியில்லை
காதில் உன் குரலில்லை
மூக்கில் உன் கூந்தல் மணமில்லை
உடலில் உன் உணர்வில்லை
தவிக்கின்றன ஐம்புலன்கள்
உன் பிரிவில்
1 comment:
ian
Post a Comment