Wednesday 28 July 2010

ஆட்டம் காணும் பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டக் கனவு.


2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராகப் பதவியேற்ற தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் முடிவடைகிறது. ஐநா வின் பொதுச் செயலாளராக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியும். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எதிரான கருத்துக்கள் சென்ற ஆண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதன் முக்கிய் ஆரம்பமாக நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் அவர்களால் சமர்பிக்கப் பட்ட இரகசிய அறிக்கை வெளிக்கசிந்தது அமைந்தது.

உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.


கவர்ச்சியற்ற பான் கீ மூன்

பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மீண்டும் சூடு பிடிக்கிறது

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.


இன்னும் ஒரு செய்திக் கசிவு

பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக இன்னும் ஒரு செய்திக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். Ahlenius accuses her boss(பான் கீ மூன்) of trying to undermine the independence of her office by refusing to allow her to hire a highly regarded and pugnacious investigator and by seeking to set up an in-house investigative body, presumably in rivalry with her own. Ban has marketed himself as a hard-headed Korean reformer, but Ahlenius angrily asserts that in his administration there is "no transparency," a "lack of accountability," and, overall, "[no] signs of reform."


கொப்பெனகனில் கோட்டை விட்ட பான் கீ மூன்

2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.


இந்தியர் இருவர் நடுவில் பான் கீ மூன்

பான் கீ மூனின் பிரத ஆலோசகராக விஜய் நம்பியார் என்பவர் இருக்கிறார். அவரது மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சகல செயறபாடுகளிலும் இந்தியாவைன் கை சம்பந்தப் பட்டிருக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் சாட்சியங்களா?


சரித்திரத்தில் மோசமான இடம் பிடித்த பான் கீ மூன்

ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார். அவர் மேலும் தெரிவிப்பது:

"While it is perhaps unfair to compare the current secretary-general with his telegenic and charismatic predecessor, Ban Ki-moon has set a new standard for being invisible," Weiss said, adding: "I think he feels comfortable with blending into the background."


இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.


சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்

பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதியுள்ளார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களில் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.

Ban Ki-moon, a colorless South Korean bureaucrat and the favored candidate of U.S. Ambassador John Bolton, was the cure for Annan's dangerous charisma. China, which exercised effective veto rights over the choice of an "Asian candidate," was equally pleased with a figure who would lower the U.N.'s profile.


இலங்கை பிரச்சனையைக் கையிலெடுத்த பான் கீ மூன்

தனது செயற்பாடுகளுக்கு எதிரான குற்றச் சாட்டுகளில் இலங்கைப் பிரச்சனை மிக முக்கிய இடம் வகிப்பதால் தனது இரண்டாவது பதவிக்கால நீடிப்பிற்கு இலங்கைப் பிரச்சனையை பான் கீ மூன் கையிலெடுத்தார். ஒரு ஆலோசனை சபையை நியமித்து அதை அடுத்த ஆண்டின் இறுதி வரை நீடித்தால் தனது பதவி நீடிப்பிற்கு சாதகமாக இருக்கலாம் என்று பான் கீ மூன் கருதுகிறார். சென்ற முறை பான் கீ மூன் தேர்வு செய்யப் பட்டபோது அவர் தேர்வு செய்யப்பட தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலகச் செய்து பான் கீ மூனை வெல்லச் செய்தது இலங்கை. அவரை இந்த முறை வெற்றியடையச் செய்வதில்லை என்று இலங்கை கங்கணம் கட்டி நிற்கிறது.


அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?

இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்காத்தால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். இபோது ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்யுமா? இலங்கையுடன் ஏதாவது திரை மறைவு உடன்பாடு ஏற்படுமா? சீனா பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்தை ஆதரிக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...