Friday 10 July 2009

மூன்று இலட்சம் தமிழர்களை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி?



மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாமில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கலாம்.

அதற்கு முதலில் தேவை பக்கத்தில் பாதக தேசம் என்று ஒன்று இருக்க வேண்டும்.
தமிழர்களை மிக மோசமான இருப்பிடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
முதலில் கவனிக்க வேண்டியது இவர்களைத் தொடர்ந்து இப்படி வைத்திருத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். அதனால் வாரத்திற்கு 1500 என்ற கணக்கில் சாகடிக்கவேண்டும்.
இவர்கள் எல்லோரு ஒரேயடியாகச் சாகமல் இருக்க ஒரு நாளக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டும் கொடுக்க வேண்டும்.
இவர்களை காவல் புரியும் மனித மிருகங்களுக்கு அலுப்படிக்காமல் இருக்க இவர்களுக்கு சப்பாட்டு பொதிகளை வீசி விட்டு இவர்கள சண்டை பிடித்து அவற்றை எடுக்கும்படி பணித்து அவர்கள் சண்டை பிடிப்பதை இம் மனித மிருகங்கள் பார்த்து இரசிக்கும் படி அடிக்கடி செய்ய வேண்டும்.
ஒரு தமிழரை வெளியில் விடுவதானால் அமெரிக்க டொலர் 15000 அறவிட் வேண்டும்.
இவர்களை அடைத்து வைத்திருக்கும் முகாமுக்குள் முதல் வேலையாக ஒரு வங்கியைத் திறக்க வேண்டும். இவர்களுக்கு வெளி நாட்டில் உள்ள உறவினர்கள் பணம் அனுப்புவார்கள். அந்நியச் செலவாணி வருவாய் கிட்டும். இப்பணத்தையும் கொள்ளை அடிக்கலாம்.
முகாமுக்குள் கடைகள் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.
முக்கிய்மாக கள்ளச் சாராயம் போன்ற தடை செய்யப் பட்ட மதுவகை போதைப் பொருட்கள் விற்பனை செய்யவும்
இக்கடைகளில் பொருட்களின் விலைகள் சாதாரண விலையிலும் பார்க்க மூன்று மடங்கு இருக்க வேண்டும்.
நோயாளர் ஒருவர் வெளியில் சென்று மருத்துவரை பார்க்க அனுமதிக்க ஐயாயிரம் ரூபா அறவிட வேண்டும். மருத்துவர் இவர்களுக்கு வழமையிலும் பார்க்க அதிகமான கட்டணத்தை அறவிட வேண்டும்.
பக்கத்து நாட்டில் இருந்து நடிகர்கள் மற்றும் பலர் சேர்ந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து அனுப்புவார்கள் அதைச் சுருட்டிக்கொள்ளலாம். அவர்கள் தாம் கொடுத்தபணம் யாருக்கு எப்படிக் கொடுக்கப் பட்டது என்று கவலைப் படமாட்டார்கள்.
அவர்கள் அனுப்பிய பொருட்களில் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை கொடுக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் அனுப்ப அனுமதிக்கக் கூடாது. பணம் மட்டுமே.
வெளி நாட்டுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.
பொய்நா சபை இவை சட்ட விரோதமான முகாம்கள் என்று தெரிந்தும் அவற்றைப் பராமரிக்க பணம் தரும். அதில் சுருட்ட வேண்டியதைச் சுருட்டவும்.
இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் என்றால் இல்லை என்று கூறிப் பொய்நா சபையில் பாராட்டுவதற்கு பக்கத்தில் பாதக நாடும் மஞ்சீனா நாடும் இருக்கிறதே.
வில்லன் நம்பியாரும் பாதிகா குமார ஆசாமியும் பொய்நா சபையில் உங்களுக்குத் தேவையான படி நடந்து கொள்வார்கள்.
சர்வதேச நாணயமில்லாச் சதி உங்களுக்குத் தேவையான பணம் வாரி இறைக்கும். பக்கத்து பாதக நாடு மட்டும் பார்த்துக் கொண்டா இருக்கும். 500 கோடி தரும் உங்களுகு. அதை பாராட்டும் முதல்வரைத் தேர்ந்தெடுக்கத்தான் இளிச்ச வாயார்கள் பல கோடியினர் இருக்கின்றனரே.

2 comments:

Anonymous said...

With respect to Srilankan Tamil ( and their relatives living elsewhere)

This type of posts are unwanted.

It adds fire to the insult already.

:-(

The best result would be a separate Tamil ruling state over there (the details of how to handle other linguistic/religious minority should be worked out). UN should involve!

ttpian said...

we are tamil people:we have karunanidhi,jeya,cho/ram/mahindha/singh/sonia-so how we can live?
no chance:it is better to die:prior to our death, it is better to finish malayalees

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...