Wednesday 22 April 2009

ஐநாவின் பொய் நா - வில்லங்கமான வில்லன் நம்பியார்



இந்திய மலையாளி நம்பியார்.
ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட "சிறப்புத்தூதுவர்" விஜய் நம்பியார் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கை சமர்பிக்க மறுத்து அடம் பிடிக்கிறார். சீனா இரசியா போன்ற நாடுகள் மூடிய அறைக்குள் இலங்கை அவலம் தொடர்பாக கலந்துரையாட ஒத்துக்கொண்டபோதும் மூடிய அறக்குள் தன்னும் தன் அறிக்கையை சமர்பிக்க முடியாதென்று அடம் பிடிக்கிறார் இந்த வில்லங்கமான வில்லன்.


இந்தியாவின் சதி?

இவர் இப்படி மறுப்பதற்கு இந்தியாவைத்தவிர வேறு யார் காரணம்? மூடிய அறைக்குள் கூட விவாதிக்கக் கூடாத அளவிற்கு நிலமை மிக உணர்ச்சி மயமானது என்று நம்பியார் அடம் பிடிக்கிறார். இது அரசியல் அல்ல மனிதபிமானம் மிக்கது என்று கூறுகிறார். இலங்கை அரசு போரை முடிப்பதற்குத் தேவையான கால அவகாசம் வழங்குவதை தவிர வேறு காரணம் என்ன இருக்கிறது இந்த நம்பியாருக்கு?


ஒரு வல்லரசு நாடு எதிர்ப்பு

ஐந்து வல்லரசுகளில் ஒன்று நம்பியாரின் நிலையை கடுமையாக எதிர்த்துள்ளது. அது பிரித்தானியாவாக இருக்கலாம்.


நம்பியார் மீது சட்ட நடவடிக்கை!

நம்பியாரின் செயலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை(subpoena) எடுக்கப் படலாம்.


subpoena
A writ issued by a court or other authorized body requiring the attendance of a person at a stated time and place, subject to penalty for non-compliance.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...