Wednesday, 4 February 2009
பனியே நீ இந்திய அமைதிப் படையா?
விண்ணில் இருந்து
வெண்பூக்கள் துாவியதுபோல்
பனி மழை பொழிந்தது
இலை உதிர்த்த மரங்கள்
புது வாழ்வு பெற்ற விதவைபோல்
மல்லிகை மலர் சூடியது போல்
புத்தழகு பெற்று நின்றன
எங்கும் துாய வெண்மை
நாளொன்று சென்றது
பனி மெல்ல உருகியது
கருஞ் சேறாக மாறியது
நடந்தோர் வழுக்கி விழுந்தனர்
வாகனங்கள் சறுக்கி மோதின
எல்லா இடத்திலும் களேபரம்
வரும்போது அழகு
போகும் போது நிர்மூலம்
பொழிந்த பனியே நீயும்
இந்திய அமைதிப் படையா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...

No comments:
Post a Comment