Thursday 8 November 2012

இலண்டனில் நடக்கும் தமிழர்களின் மாநாட்டுத் தீர்மானம்

பிரித்தானியப் பாராளமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராKளமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஒழுங்கு செய்த உலக மாநாட்டில் இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அரசியல்வாதிகளும் சமூக அமைபுக்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் இந்தியக் காங்கிரசுக் கட்சியினதும் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கூடாங்குளத்தில் இணைந்தது போல ஈழப் பிரச்சனையிலும் காங்கிரசும் அதிமுகாவும் இணைந்துவிடுவார்களா?

சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது கட்சிகளைப் பற்றி அதிகம் பேசுகின்றனர். தா. பாண்டியனின் உரையில் இருபது தடவைக்கு மேல் எனது கட்சி என்ற வாசகம் பாவிக்கப்பட்டிருந்தது. மு க ஸ்டாலின் தனது தந்தையின் டெசோ மாநாட்டைப் பெரிதுபடுத்தியும் மற்றும் தனது தந்தை ஈழத் தமிழர்களுக்கு செய்தவை பற்றியும் பேசினார். ஆனால் தனது தந்தை மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தால் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என்று சொல்லவில்லை. ஒரு கட்சியை மற்றக் கட்சியினர் இதுவரை தாக்கிப் பேசவில்லை என்பது சற்று ஆறுதலளிக்கிறது.

 மாநாட்டில் முன்மொழியப்படவிருக்கும் தீர்மானம்: 
 எமது பாராட்டை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழுவினருக்கு அவர்களின் அறிக்கைக்காக, முக்கியமாக அவர்கள் தமிழர்கள் அரசியல் இனக்குழுமக் காரணங்களுக்கா ஒறுக்கப்பட்டமையையும் அழிக்கப்பட்டமையும் ஏற்றுக் கொண்ட்மைக்காகவும் தெரிவிக்கிறோம்.

எமது பாராட்டை டப்ளினில் கூடிய இலங்கைக்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினருக்கு அவர்களின் பரிந்துரைகளுக்கும் காணல்களுக்கும் தெரிவிக்கிறோம்.

2009 மேமாதம் போர் முடிந்த போதிலும இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதையும் தமிழர்கள் இப்போது தொடர்ந்து ஒறுக்கப்படுவதைத் தடுப்பதற்கான தேவையையும் கரிசனையுடன் கருத்தில் கொள்கிறோம்.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றிற்கான ரோம் சட்டங்களையும் காக்கும் பொறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான பொறுப்பையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசின் முழுச் செயற்பாடுகளையும் முக்கியமாக போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம், இனக்கொலைக் குற்றம் போன்றவற்றையும் சுயாதின விசாரணை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வேண்டிக் கொள்கிறோம்.

1. இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் நடப்பவை தொடர்பான உண்மையை அறியும் முகமாக அங்கிருந்து தகவல்கள் சுதந்திரமாக வருவதை உறுதிசெய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படியும், 2. இலங்கை அரசின் தமிழினப் பேரழிப்பை நிறுத்தும் படியும், 3 தமிழர் பாரம்பரிய தாயகம் சிங்கள மயப்படுத்துவதைத் தடுக்கும் படியும், 4. தமிழ்மக்கள் தமது தாயகத்தில் ஒறுத்தல் பயமின்றி தமது மக்களாட்சி உரிமைகளச் செயற்படுத்த தமிழர்கள் நிலத்தில் படைத்துறை அகற்றலைச் செய்யும் படியும் பன்னாட்டு சமூகத்தினதும் பன்னாட்டு குடிசார் அமைப்புக்களின் தலைவர்களை வலியுறுத்துகிறோம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...