Sunday 29 January 2012

ஜெயலலிதாவிற்கு நஞ்சு மருந்து கொடுக்கப்பட்டது - ரெஹெல்கா

நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவரது பிரியமான தோழியையும் பிரிந்தது பற்றி ரெஹெல்கா பத்திரிகை விரிவாக எழுதியுள்ளது. 17-12-2012இலன்று போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலாவும் அவரது பரிவாரங்களும் வெளியேற்றப் பட்டு தோழிகளின் 25 ஆண்டு கால நட்பு முறிக்கப்பட்டது. இது பற்றி ரெஹெல்கா வெளிவிடும் தகவல்கள்:

1. சசிகலாவின் சகோதரரான பாஸ் எனப்படும் வி கே திவாகரன் மீது கஸ்த்தூரி பாலசுப்ரமணிய என்பவருக்குச் சொந்தமான வீட்டைத் தரைமட்டமாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் வதந்திகள் அடிபடுகின்றன.

2. சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரான ராவணன் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.

3. ஜெயலலிதாவை யாரும் சசிகலாவின் அனுமதியின்றி அணுக முடியாத நிலை இருந்தது. மந்திரிகள் அதிகாரிகள் யாவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பத்தில் தனது கட்சியினருக்கு ஜெயலலிதாவே தனது கட்சியினருக்கு தனனை சந்திப்பதாயின் முதலில் சசிகலா ஊடாக வரவும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

4. ஜெயலலிதாவிற்கு முதலில் சசிகலாவைப் பற்றி எச்சரித்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியாகும். பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்த போது அவர்களிடம் மன்னார் குடி மாஃபியா என்ப்படும் சசிகலா குடும்பத்தினர் 15% "வெட்டு" கேட்டனர் என்றும் அது அதிகமானதால் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதைக் கைவிட்டனர்.

5. சென்னை மொனொரயில் திட்டத்தை ஜெயலலிதா சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு வழங்க விரும்பியிருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரின் சதியால் அது மலேசிய நிறுவன்த்திற்கு வழங்கக்பப்ட்டிருந்தது. இதை ஜெயலலிதா விசாரித்தபோது அவரது கையொப்பம் வேறுயாரோ ஒருவரால் இடப்பட்டமை கண்டறியப்பட்டது.

6. ஜெயலலிதா தனக்குத் தரப்படும் மருந்துகளை சசிக்குத் தெரியாமல் ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தபோது அதில் சிறிதளவு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது கண்டறிபப்பட்டது. ஜெயலலிதாவிற்கு மருந்து மற்றும் உணவுகளைக் கொடுப்பது சசியால் நியமிக்கப்பட்ட ஒரு தாதி.

7. ஜெயலலிதா திமுகாவினருக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் திரட்டியபின்னரே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் இன்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் முக ஸ்டாலினிற்கு எதிராக ஒரு போதிய ஆதாரமில்லாத ஒரு வழக்கு சசியின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவிற்கு திமுகாவினருடன் சசி இரகசியத் தொடர்புகள் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் வந்தது.

8. சசிகலா, நடராஜன், ராவனன், மிடாஸ் மோகன், வி கே சுதாகரன், ரிரிவி தினகரன், எம் ராமச்சந்திரன் ஆகியோர் பெங்களூரில் சொத்துக் குவிப்பில் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பு வந்தால் அடுத்து யாரை முதல்வர் ஆக்குவது என்பது பற்றி கலந்துரையாடிய கூட்டத்தை தமிழ்நாடு காவல் துறை மாஅதிபர் ராமானுஜத்தின் வேண்டுதலின் பேரில் கர்நாடகா காவல்துறை மாஅதிபர் மொஹன் பிடாரி இரகசியமாக ஒலிப்பதிவு செய்தார். இந்த ஒலிப்பதிவே ஜெயா-சசி உறவின் பிரேதப் பெட்டியின் இறுதி ஆணியாகியது.

9. சசிகலா குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் யாவும் ஒற்றுக் கேட்கப்பட்டது

10. சசியால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஊழியர்கள் மாற்றப்பட்டனர்.

11. 2011இல் நடந்த தேர்தலில் சசிகலா அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடமிருந்து 300கோடிகள் அறவிட்டார்.

12. அதிமுக கட்சி ஆட்சிக்கு வந்தபின் சசி குடும்பத்தினர் 1000 கோடிகள் சம்பாதித்து விட்டனர்.

13. நடராஜன் இனி ஈழப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் இலாபம் தேடுவார். அவர் திமுக பக்கம் சாயலாம்.


ரெஹெல்கா வெளியிடாதவை
  • சசி-ஜெயா உறவின் விரிசலில் பூணூல்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
  • சசி-ஜெயா பிரிவால் பெரும் நன்மை அடையப் போகிறவர்கள் பூணூல்கள்.
  • நரேந்திர மோடி ஜெயலலிதாவிற்கு கொடுத்த தாதி ஜெயாவிற்கும் சசிக்கும் இடையில் சண்டை மூட்டினார்.
  • ஜெயாவை ஆட்சியில் அமர்த்தியதில் ஈழப் பிரச்சனைக்குப் பெரும் பங்குண்டு.
  • ஜெயலலிதா இனி ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நடப்பார் என்று சொல்ல முடியாது.
வெளிநாடு வாழ் குஜராத்தியினர் பலர் தமிழ்நாட்டில் முதலிட்டு தமிழ்நாட்டைச் சுரண்டத் துடிக்கின்றனர். அவர்களுக்கு சசி குடும்பம் முட்டுக் கட்டையாக இருந்தது. இவர்கள் நரேந்திர மோடியிடம் இதை முறையிட்டன்ர். இதனால் நரேந்திர மோடி சசியையும் ஜெயாவையும் பிரித்து வைத்தார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...