Wednesday 21 December 2011

முள்ளிவாய்க்கால் பேரழிவை 1971இல் எச்சரித்தார் பெரியார்: காணொளி

ஈழத் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி செல்வநாயகம் அவர்கள் எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டுக்குச் சென்று பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை பற்றிக் கூறிய போது தந்தை பெரியார் மட்டும்தான் தந்தை செல்வாவிடம் உண்மையைச் சொன்னார். பெரியார் கூறியது: "நீங்கள் உங்கள் நாட்டில் அடிமையாக இருப்பதைப் போலவே நாமும் எமது நாட்டில் அடிமையாக இருக்கிறோம். ஒரு அடிமையால் இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது" இந்த உண்மையை உணர தமிழர்களுக்கு 40ஆண்டுகள் எடுத்தது.

ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் முன்னோடியான சத்தியமூர்த்தி 1971இல் தந்தை பெரியாரைச் சந்தித்து தாம் ஆயுத போராட்டத்தைத் தொடாங்கப் போவதாகச் சொன்னபோது சிங்களவர்கள் பெரும்பானமையாக இருப்பத்தால் அவர்கள் உங்களைப் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைக் கொண்டு வந்த் உங்களை அழிப்பார்கள் என்று எச்சரித்தார். இத் தகவலை திரு சத்தியமூர்த்தி அவர்களே ஜீரீவித் தொலைக்காட்சியில் 18-12-2011இலன்று தெரிவித்தார்.
இதன் காணொளி(Courtesy GTV):

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...