Friday 25 November 2011

Facebook குறள்கள் / மாவீரர் வாரக் கவிதை


வேலை மெனக்கெட்டு முகவேட்டிலிருப்பதெல்லாம்
ஒரு அட்டு ஃபிகரோடாவது chat அடிக்கும் பொருட்டு.

ஃபிகரொன்று ஆன்லைனில் இருக்கையில்
ஒரு pokeஆவது பண்ணாதிருப்பது நன்றன்று

வரும் பதிவுற்கெல்லாம் like போட்டுக்
comment அடிப்பான் நண்பருள் ஏறு

அட்டு ஃபிகர்  டக்கர் ஃபிகர் பேதம் பாடாமல்
add பண்ணுவான் நண்பருள் தலை


 மாவீரர் வாரக் கவிதை

மண்ணுக்கென  மண்ணில் பிறந்து
மண் மிட்கப் போ
ராடி மண்ணுக்கு உயிர் கொடுத்து
மண்ணோடு  புதைந்த தேசப் புதல்வர்களே
உங்கள் தியாகத்தை மண்ணாக்குகிறொம்
எமக்குள் முட்டி மோதி பிளவுபட்டு


கொடுங்கோலர் ஆட்சி
அவர் மறைவுடன் முடியும்
எம்முள்ளே எம்மோடு எம்மாக
எம்மை அழிப்போர் துரோகம்
என்று முடியும் என எமக்குச்
சொல்லுங்கள் தேசப்புதல்வர்களே



நமக்கென ஒரு நாடு
தமிழீழம்  அதன் பெயர்
தாயகம் தேசியம் தன்னாட்சி
எனத் தோள் தட்டி நின்றோம் - இன்று
நாயகம் சிங்களமயம் இராணுவ ஆட்சி
என்றானது எம் தமிழ் ஈழம்

விடுதலைப் போரால்
வில்லங்கப் பட்டோம்
எனக் கூறி  புலம் பெயர்ந்தோம்
பலம் பெற்றோம் பலதும்  பெற்றோம்
மாவீரர் நாளிற்கு முட்டி மோதுகிறோம்
தமிழினத்தை ஈனப் படுத்துகிறோம்
தமிழ் ஈழத்தை ஈன்றெடுப்போமா?

1 comment:

Anonymous said...

nice pro-verb!!
room pootu idea varutha..!!!!!!!!!!!
keep it up.!!!!
ha ha ha......................................,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...