Wednesday 16 November 2011

ஐம்பூதமானது உன் பிரிவு

கண்களில் நீர் முட்டியது
நெஞ்சில் தீ மூட்டியது
உறவு மண்ணானது
இதயம் பெரு வெளியானது
நினைவு காற்றாகியது
ஐம்பூதமானது உன் பிரிவு

வாய்களில் வார்த்தையில்லை
கண்களில் ஒளியில்லை
காதில் உன் குரலில்லை
மூக்கில் உன் கூந்தல் மணமில்லை
உடலில் உன் உணர்வில்லை
தவிக்கின்றன ஐம்புலன்கள்
உன் பிரிவில்

1 comment:

Anonymous said...

ian

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...