நெஞ்சில் நினைவுகளின்
சுற்றி வளைப்புக்கள்
ஆசைகளின் ஆக்கிரமிப்புக்கள்
முடிவுறாத் தேடல்கள்
நெஞ்சில் அணையாத்தீயாகின
பலதைப் பார்த்து
ஒன்றை தேர்வதல்ல காதல்
ஒன்றைப் பார்த்து
ஒன்றையே தேர்ந்து
ஒன்றிலேமுடிவது காதல்
ஒவ்வொரு நாளும் பூக்கும்
புதுப் பூக்கள் போல்
புதுப் புது வார்த்தைச் சரசங்கள்
புதுப்புது உணர்வுப் பரிமாற்றங்கள்
தேங்கி எங்கும் நிற்காது
என்றும் ஓடும் நதியே காதல்.
அணைக்க அணைக்க எரியும்
அணைப்பிலே புரியும்
உணர்வுகளின் உச்சக்கட்ட
வெப்பச் சங்கமமே காதல்
வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நீ போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நிகழ்வும்
நெஞ்சில் நிலைத்து
நினைவாய் இனிப்பது காதல்
தூரங்கள் தொலைந்து
இடைவெளிகள் மறைந்து
காற்றுக்கும் இடமின்றி
காற்றோடு காற்றாய்
கனவோடு கனவாய்க்
கலக்கும் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
வந்த வழியிழந்து,
நின்ற இடம் மறந்து,
உன்பாதை நான் போக,
என்பாதை நான்போகப்,
பிரிவதில்லை காதல்,
ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு நிகழ்வும்,
நெஞ்சில் நிலைத்து,
நினைவாய் இனிப்பது காதல்
superrrrrr
புறத்தில் தெரிந்தது
அகத்தில் நுழைந்தது
உடலில் கலந்தது
பின்,
உயிரில் பிறந்தது காதல்...
மனித உயிரில் பிறந்தது காதல்...
வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நான் போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்//
அருமையான கவிதை நண்பா..
Post a Comment