Monday 14 December 2009

தமிழர்களைத் துண்டாடும் இந்தியா.


ஐம்பதுகளில் இந்தியா மலையகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒன்று படமால் தடுத்தது. எழுபதுகளில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை தீவிரப் படுத்தியபோது இந்தியா பல ஆயுதக் குழுக்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி தமிழர்களிடையே சகோதரப் போரை ஏற்படுத்தியது. அவற்றை எல்லாம் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடைந்த போது பல தடவை அவர்களுக்கிடையில் பிளவுகளை இந்தியா ஏற்படுத்தியது. அவற்றில் முக்கியமானவை மாத்தையா பிளவும் கருணாபிளவும்.

மேற்குலகில்
இப்போது இந்தியா புலம் பெயர்ந்த தமிழர்களைத் துண்டாடும் முயற்ச்சியில் இறங்கையுள்ளது. இந்திய உளவாளிகள் இப்போது பலமுனைகளில் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுகிறார்கள். பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு இவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பிரித்தானியாவில் 2009 மே மாதத்திற்கு முன்னர் இவர்கள் தமிழ் உணர்வாளர்கள் நடாத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டது கூட இல்லை. ஆனால் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் முன்னிற்கின்றார்கள்.

இலங்கையில்
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மஹிந்த ராஜபக்சே என்ற அரக்கனை ஆதரிப்பதாக தெரிவிக்கவில்லை. இது இந்தியாவிற்கு ஏமாற்றம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தீவிர தமிழின உணர்வாளராகக் கருதப் படுபவர் சிவாஜிலிங்கம் அவர்கள். இவருக்கு எதிராக இவரது சகாக்களே குற்ற சுமத்த ஆரம்பித்து விட்டனர்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கம் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பாளராக நிற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவாஜிலிங்கம் பாரிய பணத்தொகையையும் பெற்றுக் கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு வரக் காரணம் என்ன? இவர்களை இந்தியாவைத் தவிர எவரும் பிளவு படுத்த முடியாது.

தமிழர்கள் இனியாவது விழிப்பாக இருக்க வேண்டும்

1 comment:

pandiyan said...

ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

http://siruthai.wordpress.com/2009/12/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...