Thursday 29 October 2009

இந்திய முகத்தில் கரி பூசிய திஸ்ஸ விதாரண


பிரித்தானியப் பாராளமன்றின் கூட்டங்களுக்கான அறை ஒன்றில் இலங்கை தொடர்பாக ஒரு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்களாக நடக்கும் இக்கூட்டத்தில் இலங்கையில் இருந்து வருகை தந்த பேராசிரியர் திஸ்ஸ விததாரணையுகம் பிரித்தானியாவிற்கான இலங்கையின் உதவித் தூதுவர் அம்சாவும் கலந்து கொண்டனர். பேராசிரியர் வித்தாரண இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்காக அமைக்கப் பட்ட சர்வகட்சிக் குழுவின் தலைவராவார். அத்துடன் இலங்கையில் கணக்கில்லாத அமைச்சர்களில் அவரும் ஒருவர். இந்த சர்வ கட்சி குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும் பெரும்பாலான தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை மஹிந்த அரசு புறக்கணித்தமையும் இங்குறிப்பிடத் தக்கது.

திணிக்கப் பட்ட 13வது திருத்தம்.
அரசியல் கற்றுக் குட்டி என வர்ணிக்கப் பட்ட ராஜீவ் காந்தியை ஆசியக் குள்ள நரி என்று வர்ணிக்கப் பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ஏமாற்றிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசியலமைப்பில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாகக் கூறிக் கொண்டு செய்யப் பட்ட 13வது திருத்தம் இலங்கைமீது இந்தியாவால் திணிக்கப் பட்ட ஒன்று என அங்கு உரையாற்றிய பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது பங்குபற்றும் மக்களாட்சி முறைப்படி செய்யப் பட்டது அல்ல என்றும் கூறினார். அது மட்டுமல்ல இது பெரிய மாநிலங்களைக் கொண்ட இந்தியாவிற்கே பொருந்தும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். இது இந்திய முகத்தில் கரிபூசும் உரையாகும்.

உள்ளூரில் தயாரிக்கப் படும் கிராம மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கம்தான் உகந்ததாக இருக்கும் என்றார் வித்தாரண. அதாவது தமிழ்நாட்டு உதவாக்கரைக் கோமாளி அரசியல்வாதி மணிசங்கர ஐயர் சொன்ன பஞ்சாயத்துத் தீர்வை வித்தாரண அங்கு முன்வைத்தார். ஆலமரமும் செம்பும் தான் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வாகும்.

விதாரண சொன்ன இடம் பெயர்ந்தோர் பற்றிய விபரம்:

ஆரம்பத்தில் இருந்தோர்: 306,476

October 4, 2009 இல் முகாம்களில் இருந்தோர்: 237,641 .

குடும்பங்களுடன் இணைக்கப் பட்டோர்:19,675

வேறு முகாம்களுக்கு மாற்றப் பட்டோர்: 15,659

புனர்வாழ்வு அளிக்கப் படுவோர்:2,938

காணாமல் போனோர்: 2,111

மருத்துவ மனைகளில்: 5,425

விடுவிக்கப் பட்டோர்: 23,027

பேராசிரியர் இப்போது தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீது கரிபூசுகிறார். அவர்கள் 58000 பேர் விடுவிக்கப் பட்டதாக பிதற்றுகிறார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...