Thursday 15 October 2009

பிரபாகரன் 64 படகுகளுடன் தப்பினாரா?






விடுதலைப் புலிகளின் கடற்படையிடம் அவர்களால் வடிவமைக்கப் பட்ட மிக வேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரகப் படகுகள் பல இருந்தன. இவை 23 மணித்துளிகளில் பாக்கு நீரிணையக் கடக்கக்கூடியன. அத்துடன் இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட படகுகளும் இருந்தன. இவற்றை இலங்க அரச படைகள் கைப் பற்றியதாக காட்சிப் படுத்தவில்லை. இப்படகுகளுக்கு என்ன நடந்தது? இலங்கையில் இருந்து கசிந்த தகவல்களின் படி மே மாததின் இரண்டாம் வாரத்தில் வன்னியில் இருந்து 64 படகுகள் தப்பிச் சென்றதாக செய்மதிப் படப் பதிவுகள் கிடைத்துள்ளனவாம். இப் படகுகளின் மூலம் விடுதலை புலிகளின் முழுத்தலைமையும் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எஞ்சிய விடுதலைப் புலிகள் பெருமளவு பணத்துடனும் நகைகளுடனும் குடும்பத்தினருடன் மக்களோடு மக்களாக அரச கட்டுப் பாட்டுக்குள் வந்து ஒருவருக்கு பத்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வரை செலவழித்து தமது உறவினர் அல்லது நண்பர்களாக உள்ளஅரச சார்புத் தமிழ்க் குழுக்களின் உதவியுடன் தப்பிச் சென்று விட்டனர். இறுதிவரை களத்தில் நின்றவர்களில் முக்கியமானவர்கள் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகளிர் அணித் தலைவி தமிழினியும் மற்றும் அரசியற் துறையினருமே.

அண்மையில் இறுதிக் கட்டப் போரில் பத்மநாதனுடன் படைத் துறையைச் சார்ந்தவர்களில் சாள்ஸ் அன்ரனி மட்டுமே தொடர்பில் இருந்ததாக அயல் நாட்டு உளவுத்துறையின் ஒட்டுக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி நேரத்தில் பிரபாகரனோ பொட்டு அம்மானோ ஏன் பத்மநாதனுடன் தொடர்பு கொள்ளவில்லை?
இன்றுவரை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவில் நிலுவையில் ஏன் உள்ளது?

  • இறக்காத ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறந்துவிட்டான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தல் எளிது.
  • இறந்த ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறக்கவில்லை என்றும் சாதிக்கலாம்.
இதுவரை இலங்கை அரசு வெளியிட்ட இறந்த பிரபாகரனின் உடலின் படங்கள் நம்ப முடியாதன. இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை.

7 comments:

Anonymous said...

ஏண்டா குழப்பற....

Barari said...

enappa innum karpanaiyileya irukkireerkal.thookkaththai kalaiththu nijaththai paarungal.

அன்புடன் நான் said...

உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். அதுவரை தலைவரை கொல்லாதிருப்போம்.

bk.gowritharan said...

ninka enna big ulavuthuri vachhirikkiriyalo or .............. ellam elutha nanna irukkumaleeeee ....

Poddu said...

Mavira nal varai porupam...!

Anonymous said...

இருந்தாலும் இறந்தாலும் பாசமுள்ள தலைவர் இவர் ஒருவரே.

Anonymous said...

அந்திக் கடலில் மறைந்த சூரியன் மறுநாள் உதிப்பான்.
நந்திக் கடலில் மறைந்த தலைவனும் நாளை வருவான.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...