Thursday 21 May 2009

இந்தியா ஏன் பிரபாவையும் பொட்டுவையும் தப்பவிட்டது


பிரபாகரன் மரணம் சம்பந்தமாக இலங்கை அரசின் குட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடை படுகிறது. பல இணையத் தளங்கள் ராஜபக்சே இறந்து கிடப்பது போலவும் அவர் பிரபாகரனின் காலில் விழுந்து கெஞ்சுவது போலவும் படங்களைப் போட்டுக் கேலி செய்கின்றன.

நக்கீரன் பத்திரிகை புலிகளின் தலமைப் பீடம் தப்பிவிட்டதாக ஒரு நீண்டகட்டுரை வெளியிட்டுள்ளது. அது பிரபாகரன் கையில் தான் கொல்லப்பட்டதான செய்தியைக் கொண்ட பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு தனது "இறந்த உடலை" தொலைக்காட்சியில் பார்த்துச் சிரிப்பது போல முற்பக்க படத்தையும் பிரசுரித்துள்ளது. இது இலங்கை அரசிற்கு விடுக்கும் சவால்! உனது படம் உண்மையென்றால் இதுவும் உண்மைதானே!

ஆனால் இப்போது முக்கியமான பகுதி

இந்தியா ஏன் புலிகளின் தலமைப் பீடத்தைத் தப்பவிட்டது? தேர்தல் முடிந்துவிட்டது. தமிழர்களின் வாக்குகளுக்காக தப்ப விடவில்லை. மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வேண்டுதலுக்குப் பணிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. யாரோ(?) செய்த ராஜீவ் கொலைக்கு ஏன் பழி வாங்கவில்லை?

நக்கீரன் இப்படிச் சொல்கிறது:
சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.

ஏன் இந்த உத்தரவு? தமிழ்த் தேசிய வாதம் என்று இலங்கையில் முற்றாக ஒழிக்கப் படுகிறதோ அன்றே இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை நழுவிவிடும். சிங்கள-பெளத்தப் பேரினவாதிகள் அனைவருமே மிகக் கடுமையான இந்திய எதிர்ப்பாளர்கள். அது மட்டுமல்ல சீனாவுடன் நெருக்கமான் உறவைப் பேணுபவர்கள். தமிழ்த் தேசிய வாதம் உயிருடன் இருக்கும் வரையிலேயே இந்தியாவல் இலங்கையைத் தன் பிடியில் வைத்திருக்க முடியும்.

இந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பல கடற்பபடைத் தளங்களை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு எனும் கட்டுரையை கீழ் உள்ள இணைப்பில் காணலாம்:
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_17.html

எந்த ஒரு கட்டத்திலும் விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து விட்டனரா?

6 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வேல்தர்மா,

உங்கள் தளத்துக்கு வரமுன்னர் இந்த எச்சரிக்கை வருகிறது

//Warning: Visiting this site may harm your computer!
The website at veltharma.blogspot.com contains elements from the site www.ntamil.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for www.ntamil.com.
Learn more about how to protect yourself from harmful software online.//

நீங்கள் NTamil இனது நிரலை நீக்காது விட்டீர்களானால் கூகுள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருக்கும். அதன் பின் உங்களது தளம் கூகுளால் முடக்கப்பட்டிருக்கும்.

ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூகுள் குரோமில் உங்களது தளத்தைப் பார்வையிட்டுப்பாருங்கள்.அல்லது WOT சேவையைப் பாவித்துப் பாருங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

தேவன் மாயம் said...

உங்கள் கணிப்பு உண்மையாகட்டும்!!

Tamilan said...

தமிழனுக்கு எதிரானவர்களும் ஆப்பு அடிக்கப்பட வேண்டியவர்கள் (இதில் தழிழர்(?) சிலரும் அடங்குவத்தான் கவலைக்குரியது.)...

.............................................................................................

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் நடந்தது இதுவாகவும் இருக்கலாம்...

சரத் பொன்(னயன்)சேகாவின் தொலைபேசி உரையாடல்...(உரையாடல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...)

பொன்சே : நான் பொன்சே கதைக்கிறன்...

000 : சொல்லுங்க sir...

பொன்சே : எனக்கு அவசரமா நாலு ஐந்து body வேணும்...

000 : bodyயா...எதுக்கு...?

பொன்சே : நான் சொன்னத செய் man...

000 : நானே arange பண்ணனுமா...?

பொன்சே : ஆமா...

000 : உங்க பேரில் bill போடட்டா...?

பொன்சே : evidence நீயே create பண்ணுவா போல...no evidence man...

000 : எங்கே arrange பண்ண...?

பொன்சே : எங்கேயாவது சீக்கிறம் arrange பண்ணு...

000 : House of Fashion , No Limitன்னா okவா...?

பொன்சே : house of fashion , no limit...! என்ன man சொல்றா...?

000 : girls போடுற உள் bodyயதான சொல்றீங்க...?

பொன்சே : ஆமா...உங்க வீட்டு கொடியில் காயிறத எடுத்திட்டு வா...

000 : அது use பண்ணியிருக்கு பறவாயில்லயா...?

பொன்சே : you idiot...டேய்......
உங்கள எல்லாம் வச்சுகிட்டு...இந்தியாவும் உலக நாடுகளும் இல்லாட்டா என்ன வச்சு காமெடிதான் பண்ணியிருப்பீங்க...அப்புறம் எல்லோரும் சேர்ந்து ரூபவாகினியில் அசத்தப்போவது யாரு சிங்களத்திலதான் பண்ணிகிட்டு இருந்திருக்கவேணும்...(அதுவும் நல்லாத்தான் இருக்கும்...அதுல விஜயகாந்த் voiceல மிமிக்கிரி பண்ணி பாகிஸ்தான் தீவிரவாதிகள பிடிக்கிறமாதிரி...நீங்க புலிகள தீவிரவாதின்னு பொய் அறிக்கை விட்டு பிடிக்க வேண்டியதுதான)

நான் சொன்னது dead body man...!

000 : ooooo...sorry sir...

பொன்சே : சீக்கிறம் arrange பண்ணு...

000 : ஆண் bodyயா...? பெண் bodyயா...?

பொன்சே : ஆ.....gym
body...
ஐயோ...முடியல...இப்பவே கண்ணை கட்டுதே...

000 : கோபப்படாதீங்க...இப்ப உங்க plan புரிஞ்சு போச்சு...

பொன்சே : இப்பவாவது புரிஞ்சுதே...சீக்கிறம் bodyய ready பண்ணி முள்ளிவாய்க்கால் எடுத்துட்டு வா...
middle ageல ஒரு இரண்டு...கொஞ்சம் oldடா ஒரு இரண்டு...young ageல ஒன்று...

000 : ஏன் முள்ளிவாய்க்கால்...?கொழும்பில் வாய்க்கால் இல்லையா...?

பொன்சே : கொழும்பில் எங்க இருக்கு...?

000 : வெள்ளவத்த பாலத்துக்கு கீழ் ஓடுதே அது...

பொன்சே : ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்...எதுக்கு risk எடுத்துகிட்டு...

000 : எனக்கு risk எடுக்கிறதெல்லாம் rusk சாப்பிடுறமாதிரி...(உலக நாடுகள் ஆப்படிக்கிற உங்க areaவ பொத்தி மறைச்சுக்கிட்டதால எங்க ஆப்போட sharpபு புரியல...தனியா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்...ஆப்பு)

பொன்சே : ஒரு வகையில பார்த்தா அதுவும் குட்டி யாழ்ப்பாணம்தான்...ஆனாலு களனி ஆறு கப்பு கொஞ்சம் overரா இருக்கு...அதால நான் சொன்ன இடத்துக்கு கொண்டுவா...வரும்போது ஒரு plastic surgeonஐயும் கூட்டிட்டு வா...

000 : அதை விட கிரபிக்ஸ்ல செய்யிறது நல்லம்ன்னு நினைக்கிறன்...

பொன்சே : do what i said man...

000 : ok sir...

(அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன...!)

.............................................................................

(மறுநாள்...)

பொன்சே : என்ன man!...நாம விட்ட பீலா இப்பிடி ஆகிட்டுது...(தமிழன் என்ன கேனயனா?...எவ்வளவோ கண்டுபிடிச்சிட்டம்...இதை கண்டுபிடிக்கமாட்டமா...?)

000 : இதுக்குத்தான்...எதையுமே plan பண்ணிப் பண்ணனும்...plan பண்ணிப் பண்ணாட்டா இப்படித்தான் சொதப்பும்...

bitter luck...sorry better luck next time...

so....வதந்திகளை நம்பாதீர்கள்...இதற்கான பதிலை வரும் காலம் சொல்லும்...அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம்...


...[நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu]...

Vel Tharma said...

Thanx Madhuvathanan. I think I have sorted out the problem. Please tell me still there is the warning message.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இப்போ இந்த எச்சரிக்கையைக் காண முடியவில்லை.

சரியாகிவி்ட்டது என நம்புகிறேன்.

HQ tamil said...

yeah this may be r8

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...