Saturday 7 February 2009

சதிகள் பல செய்யுது பார்ப்பனியம்


சாவின் விளிம்பில் நம்மினம்
சரணடை என்கிறது பலதேசம்
இது நடக்குமா
அது அடுக்குமா

எண்பத்து மூன்றில் பார்த்தோமே
பேரினவாதத்தின் பேயாட்டம்
அன்று முடிந்ததா
எம் போராட்டம்

எண்பத் தெட்டில் பார்த்தோமே
ஆரிய அமைதிப்படை அட்டூழியம்
அதில் அழிந்ததா
எம் தேசியவாதம்

சதிபல செய்யுது பார்ப்பனீயம்
வீறு கொண்டது சிங்களம்
இங்கு ஓயுமா
எங்கள் போரலை

துரோகிகள் பலரைக் கண்டோமே
தோல்விகள் பலதையும் கண்டோமே
என்று தளர்ந்தது
எம் மனத்துணிவு

எது வரினும் அஞ்சோமே
எவர் வரினும் துவளோமே
எங்கள் தாகம்

என்றும் தமிழீழம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...