Monday 10 October 2011

நகைச்சுவைக் கதை: மூளையில்லாமல் 802 இந்தியர்கள்


அது ஒரு பன்னாட்டு மருத்துவர்கள் மாநாடு. மருத்துவர்கள் தங்கள் நாட்டு மருத்துவச் சாதனைகளைப்பற்றி கூறிக் கொண்டிருந்தனர். பிரித்தானிய மருத்துவர் தமது நாட்டில் சிறு நீரகம் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார். அமெரிக்கர் தமது நாட்டில் நுரையீரல் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார்.


சீன மருத்துவர் தமது நாட்டில் இருதயமில்லாதவர்கள் நாட்டை நடத்துவ்தாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொண்டார். இந்திய மருத்துவர் தமது நாட்டில் மூளையே இல்லாத 802பேர் ராஜ் சபாவிலும் லோக் சாபாவிலும் ஆயிரக்கணக்கானோர் சட்டசபைகளிலும் இருந்து நாட்டை நடத்துவதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

2 comments:

நெல்லி. மூர்த்தி said...

நச்!

இவர்களுக்கெல்லாம் மூளையில்லாமல் இல்லை! தங்களின் / சார்ந்திருக்கும் அரசியற்கட்சிகளின் நலத்துக்கு மட்டுமே மூளையை உபயோகிப்பவர்கள்!

Anonymous said...

இவர்களுக்கெல்லாம் மூளையில்லாமல் இல்லை! தங்களின் / சார்ந்திருக்கும் அரசியற்கட்சிகளின் நலத்துக்கு மட்டுமே மூளையை உபயோகிப்பவர்கள்! இல்லை இல்லை.. தங்கள் குடும்ப நலனுக்குப் பாவிக்கிறார்கள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...