Tuesday 13 July 2010

உலகக் கிண்ணம்: வென்றது தென் ஆபிரிக்காவே.






என்னுடன் வேலை செய்யும் ஆங்கிலேயர் தென் ஆபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண கால்பாந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியின் மோசமானா விளையாட்டால் அதிருப்தியடந்திருந்தார். அவரைக் கிண்டல் செய்வதற்கு நான் அவரிடம் கூறினேன் இங்கிலாந்து இந்தியா இலங்கை பாக்கிஸ்தானுடன் கால்பந்தாட்டமும் ஐரோப்பிய தென் அமெரிக்க நாடுகளுடன் துடுப்பாட்டமும் (கிரிக்கெட்) ஆடினால் நிச்சயம் வெற்றி பெறும் என்று. ஆங்கிலேயர்கள் தாங்கள் இன்றும் உலகின் மேன்மை மிக்க இனம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு மட்டத்தில் பாரிய நிகழ்வுகளை வெற்றீகரமாக ஒழுங்கு செய்வதில் தமக்கு நிகரில்லை என்றும் எண்ணுகிறார்கள். பிபிசி செய்தி நிறுவனம் வேறு நாடுகளில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் குறைகண்டு பிடித்து வெளியிடுவதில் முன்னிற்கும். ஆனால் தென் ஆபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத்தை தென் ஆபிரிக்கா ஒழுங்கு செய்த விதத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஆபிரிக்க கால் பந்தாட்ட இரசிகர்கள் vuvuzelas என்னும் ஊதுகுழல் பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது நாளடைவில் அது பல நாட்டினராலும் பாவிக்கப்பட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ஆப்பிள் ஐ போனில் அதுவும் ஒரு செயற்படு பொருளாக இணைக்கப் பட்டது.

இங்கிலந்தும் ஜெர்மனியும் கால்பந்தாட்டத்தில் மோதிக் கொள்ளும் போது இரசிகர்கள் மத்தியில் பலத்த பதட்டம் நிலவும். போட்டி முடிந்தவுடன் பாரிய கலவரம் நடப்பது வழக்கம். இம்முறை எந்த அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி தென் ஆபிரிக்கா சமாளித்தது பெரும் சாதனை.

இப்போதைய உலக நிலையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் முக்கிய பிரச்சனை பாதுகாப்புப் பிரச்சனை. இதை தென் ஆபிரிக்கா சாதுரியமாகச் சமாளித்தது. அடுத்தது உலகத்திலேயே மோசமான இரசிகர்களைக் கொண்டது கால்பந்தாட்டம் தான். பலநாடுகளிலும் இருந்து வந்த பல தரப்பட்ட இரசிகர்கள், பல மொழி பேசிம் இரசிகர்கள் அவர்களின் குழறு படிகள் எல்லாவற்றையும் தென் ஆபிரிக்கா சாதுரியமாக சமாளித்தது.

கால்பந்தாட்டத்தால் இனஒதுக்கல் உதைத்துத் தள்ளப்பட்டது
தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கால் பந்தாட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நிற வெறியர்களால் தென் ஆபிரிக்கா ஆளப்பட்ட போது அரசு கால் பந்தாட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. கால் பந்தாட்டத்தில் கறுப்பினத்தவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் மத்தியில் கால்பந்தாட்டத்திற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. தென் ஆபிரிக்காவின் சிறைகளில் இருந்த கறுப்பினத்தவர்கள் தங்களுக்குள் பல கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி அவற்றுக்குள் போட்டிகளை ஏற்படுத்தி சிறந்த குழு நிலைப்போட்டிகளை ஒழுங்கு செய்தனர். இவை மிகச் சிறப்பாக அமைந்தமை அவர்களை சிந்திக்க வைத்தது. மோசாமான நிலையில் எம்மால் இப்படி சிறப்பாக ஒழுங்கு செய்ய முடியுமாயின் ஏன் நம்மையே நாம் ஆள முடியாது என்று சிந்திக்க வைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய அப்போது தடை செய்யப் பட்டிருந்த ஆபிரிக்க தேசியக் காங்கிரசும் மக்களை ஒரு இடத்தில் திரட்டுவதற்கு கால்பந்தாட்டங்களை ஒழுங்கு செய்தது. அங்கு தனது கொள்கை விளக்கங்களையும் செய்தது. போராட்ட நிதியும் திரட்டப்பட்டது. இதனால் கால்பந்தாட்டத் தரம் மிகவும் உயர்ந்தது. 1976இல் முதல் முதலாக கறுப்பினத்தவரும் வெள்ளை இனத்தவரும் கலந்த ஒரு கால்பந்தாட்ட அணி உருவாக்கி ஆர்ஜெண்டீனாவுடன் விளையாடியது. வீரர்கள் மைதானத்தில் ஒன்று பட்டு நிற்க பார்வையாளர்கள் கறுப்பு வெள்ளை எனப் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். தென் ஆபிரிக்க அணி 5-0 என்று வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்திற்கான முக்கிய நிதி மூலமாக கால்பந்தாட்டம் திகழ்ந்தது.

இன்று இன ஒதுக்கற் கொள்கையில் இருந்து தென் ஆபிரிக்கா மீண்டு வந்து எப்படி வீறு கொண்டு நிற்கிறது என்பதை இந்தக் கால் பந்தாட்டப் போட்டி பறை சாற்றி நிற்கிறது.

தோல்வியடைந்த நடுவர்கள்
இந்த உலகக் கிண்ண கால் பந்துப் போட்டியில் தோல்வி கண்டது நடுவர்களே. நடுவர்கள் பல தவறுகளை விட்டனர்.
இது தொடர்பான தகவல்களை இங்கு பார்க்கலாம்: தடுமாறிய நடுவர்கள்

2 comments:

Jegan said...

Good

Anonymous said...

கால்பந்தாட்டத்தை வேறு கோணத்தில் அலசப்பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...