Monday 19 July 2010

சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!


சிவகங்கை தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் ஐயா அவர்கள் இலங்கைத் தமிழர்கள் பற்றி தனது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

  • சிதம்பரம் ஐயா சொன்னார்: நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது.
பிரபாகரன் சென்ற பாதை ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கியது. அந்தப் பாதை உங்களுக்கு எதிரானதா? அவர் பாதையில் உங்கள் எஜமானர்கள் எத்தனை தடை போட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் எஜமானர்களின் பேரினவாதக் கொள்கைக்கு அவர் சென்ற பாதை உகந்ததல்ல. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால் உங்கள் எஜமானர்கள் ஒரு தேசிய மாயைக்குள் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சிக்க வைத்து அவர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழன் பாதையில் தமிழ்நாட்டுத் தமிழனும் விழித்துக் கொள்வானா என்ற பயம் உங்கள் எஜமானர்களுக்கு.

  • சிதம்பரம் ஐயா சொன்னார்: ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிரு ந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.
ராஜிவ் காந்தி பிரபாகரனைக் கொல்ல என்னென்ன திட்டங்கள் தீட்டினார் என்று நீங்கள் அறிய மாட்டீர்களா? ராஜீவ் காந்தி கூறியதைக் கேட்ட வரதராஜப் பெருமாள் என்ன முடிசூடா மன்னராகவா இருக்கிறார்? அவரை முதலமைச்சராக்கினார் உங்கள் ராஜீவ் காந்தி. அவருக்கு இலங்கை அரசு ஒரு நயா பைசா கூடக் கொடுக்கவில்லை "அரசு" நடத்த. கடைசியில் அவர் என்ன ஆனார். உங்கள் ராஜீவ் காந்தியின் ஒப்பந்தத்தால் வந்த இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் படி முதலமைச்சராக வந்த பிள்ளையான் என்ன முடிசூடா மன்னராகவா இருக்கிறார்? சாக்கடையில் வாழும் பன்றி மாட்டைப் பார்த்துச் சொன்னதாம் சும்மா பசும் புல் பசும் புல் என்று அலையாதே. என்னைப் போல் சாக்கடையை ஏற்றுக் கொண்டாயானால் இராச போக வாழ்க்கை என்று.

உங்கள் ராஜீவ் காந்தி என்ற அரசியல் முட்டாள் தமிழர்களை ஆயுதங்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம் என்றார். சகல இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. விடுதலைப் புலிகள் ஒப்படைக்கவில்லை என்று பறித்தார். அதன் பின்னர் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டனர். தமிழர்களுடன் தான் செய்த கனவான் ஒப்பந்தத்தை மீறிய அயோக்கியனல்லவா உங்கள் ராஜிவ் காந்தி.

  • சிதம்பரம் ஐயா அண்மையில் சொன்னார்: போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகள் அமைப்பதற்கு நேரடியாக உதவி செய்யும். அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் வைப்புச் செய்யும்.
மறுநாள் இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உங்கள் கூற்றை ஏற்க மறுத்தார். இந்தியா நேரடியாகக் கொடுக்க முடியாது இலங்கை அரசிடம்தான் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாவம் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள். வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இருக்கிறார். இப்போது தகவல் வருகிறது இந்தியா கொடுக்கும் பணம் தமிழர்கள் காணியை அபகரித்து அதில் சிங்களவர்களைக் குடியேற்றப் பாவிக்கப் படும் என்று. சிதம்பரத்தின் அரசு சிங்களவர்களை தமிழர் நிலங்களில் குடியேற்றப் பாவிக்கப் படுகிறது. தமிழர் நிலங்களை அபகரிக்க இந்தியா உதவுகிறதா?

  • சிதம்பரம் ஐயா சொல்கிறார்: இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் பயங்கரவாதச் சட்டம் எல்லாம் இப்போதும் அமூலில் உள்ளது ஐயா சிதம்பரம் அவர்களே! அமைதி திரும்பிய நாட்டில் இது எல்லாம் ஏன் ஐயா?

சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!

உங்கள் இந்திய அரசிற்கு திராணி இருந்தால் ராஜீவ்-ஜே. ஆர் ஒப்பந்தப்படி இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை முழுமையாக அமூல் செய்யுங்கள்.

4 comments:

♥ தயா பாலா ♥ said...

ஏமாற்று அரசியல் நடத்துகின்ற அவர்களுக்கு இது எல்லாம் எங்கே விளங்க போகிறது.

Anonymous said...

educated PEMANI....

Anonymous said...

பேமானியேதான்... இவனும் சேர்ந்துதான் 4 மணித்தியால உண்ணாவிரத நாடகமாடி ஒருநாளில் 25000தமிழர்களை இலங்கையுடன் இணைந்து கொன்றார்கள்..

Anonymous said...

அடுத்தத் தேர்தலில் ஒரு காங்கிரசுக்காரர் கூட வெல்லக் கூடாது.இப்போதிருந்தே காங்கிரசுதான் ஈழத்தமிழர்களின்,தமிழ்நாட்டுத் தமிழர்களின் முதல் எதிரி என்பதை உணரவைப்போம்.ராஜபக்சேவுடன் கூடிக் குழவிவிட்டு யாரை ஏமாற்ற இந்த வேடம்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...